புதுகை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சியில் ஏராளமானோர் கைது
புதுக்கோட்டை, ஜன.22- நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை. தஞ்சாவூர், கும்ப கோணம்,திருச்சியில் போக்கு வரத்து தொழிலாளர்கள் நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப் பட்டனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி 9 ஆண்டுகளாக ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலா ளர்களுக்கு நிறுத்தி வைக்கப் பட்டுள்ள அகவிலைப்படியை உட னடியாக வழங்க வேண்டும். 2023 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை வழங்க வேண்டும். 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சு வார்த்தையை உட னடியாகத் தொடங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் புதன்கிழமை மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை பேருந்து நிலை யம் முன்பாக நடைபெற்ற போராட் டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மண்டலத் தலைவர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மண்டலப் பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன், பொருளாளர் முத்துக்குமார், சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, பொருளாளர் எஸ்.பால சுப்பிரமணியன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மண்டலத் தலை வர் லோகநாதன் ஆகியோர் பேசி னர். போராட்டத்தில் அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே. ரெத்தினவேல், தையல் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் சி. மாரிக்கண்ணு, மின் ஊழியர் மத்திய அமைப்புச் செயலாளர் நட ராஜன் உள்ளிட்ட 150-க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். இதில் 80 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கும்பகோணம் போக்குவரத்து சிஐடியு மத்திய சங்கத் தலைவர் த.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். அரசு விரைவு போக்குவரத்து கழக சிஐடியு செயலாளர் எஸ்.செங்குட் டுவன் முன்னிலை வகித்தார். சிஐ டியு மாநிலச் செயலாளர் சி. ஜெய பால் துவக்கி வைத்துப் பேசினார். சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு, டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் மதியழகன், அரசு ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப் பாளர் என்.குருசாமி ஆகியோர் ஆதரித்துப் பேசினர். மறியலில் ஈடு பட்ட 100 க்கும் மேற்பட்ட போக்கு வரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு கும்பகோணம் மண்டல அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க சம்மேளன பொதுச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் ஆர். மனோகரன் துணைப் பொதுச் செயலாளர் மகேந்திரன், ஓய்வு பெற்றோர் நல சங்க பொறுப்பாளர்கள் திருநாவுக்கரசு. தாமோதரன் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு திருச்சி, கரூர் மண்டல தலைவர் சிங்கராயர் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் சீனி வாசன் துவக்கி வைத்துப் பேசி னார். சிஐடியு மாநகர் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் ஆதரித்துப் பேசினார். சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து சங்க மாநில தலைவர் அருள்தாஸ், மண்டலபொதுச்செயலாளர் மாணிக்கம், மண்டல துணைத் தலைவர் கருணாநிதி, பொருளா ளர் முத்துக்குமார், ஓய்வு பெற்றோர் மண்டல பொருளாளர் ராமதாஸ், மத்திய சங்க நிர்வாகி கள், கிளை நிர்வாகிகள், தொழிலா ளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழி லாளர்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.