districts

img

தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குக!

புதுக்கோட்டை, நவ.16 - சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோ ருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 15 ஆவது மாநாடு  புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடை பெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சே.ஜபருல்லா தலைமை வகித்தார்.  துணைத் தலைவர் க.குமரேசன் வரவேற்றார்.  மாநாட்டை தொடங்கி வைத்து மாநில துணைத் தலைவர் எம்.செல்வராணி உரை யாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலா ளர் இரா.ரெங்கசாமி, வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் ரமா.ராமநாதன்,  மகளிர் அறிக்கையை மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் மா.சுபா ஆகியோர் முன்வைத்தனர். தோழமைச் சங்க  நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். பணி ஓய்வு பெற்ற மாவட்ட நிர்வாகிகள் விகேஏ. மனேகரன், பி.அன்பு ஆகியோர் கவுரவிக் கப்பட்டனர். மாநாட்டில் தலைவராக சே.ஜப ருல்லா, செயலாளராக இரா.ரெங்கசாமி,  பொருளாளராக கரு.மணிவண்ணன் துணைத் தலைவர்களாக கே.குமரேசன்,  ரமா ராமநாதன், ஆர்.செல்வம், த.ராஜ கோபால், இணைச் செயலாளர்களாக ஆ. பழனிச்சாமி, எஸ்.குணசேகரன், ஜி.என்.பாலமுருகன், ஏ.கருப்பையா, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநிலச் செயலாளர் ச.ஹேமலதா சிறப்புரையாற்றினார். ஆ.பழனிச்சாமி நன்றி  கூறினார்.