தஞ்சாவூர், நவ.7- தமிழகத்தில் நூலகத்துக்கு தமிழ் நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வரு கிறது என்றார் சட்டப்பேரவை நூலகக் குழுத் தலைவர் எஸ்.சுதர்சனம். தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம், மாவட்ட மைய நூலகம் உள்ளிட்ட வற்றில் தமிழ்நாடு சட்டப்பேரவை நூல கக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். இதனிடையே, சரசு வதி மகால் நூலகத்தில் செய்தியா ளர்களிடம் குழுத் தலைவர் எஸ்.சுதர்ச னம் தெரிவித்ததாவது: சரசுவதி மகால் நூலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை குறித்து அரசின் கவ னத்துக்கு கொண்டு செல்லப்படும். கீழடி போன்ற 3 ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு, வர லாற்றை அறிவதற்காக தமிழக அரசு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து வரு கிறது. அந்த வகையில், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதற்காக இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த நூலத்துக்கு நிரந்தர இயக்குநரை நியமிப்பது குறித்தும் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். தமிழ்நாட்டில் நூலகங்கள் மீது முதல் வரும், விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சரும் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஒவ்வொரு தொகுதி யிலும் ஒரு நூலகம் உருவாக்குவதற் கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, பல இடங்களில் நூல கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மக்களிடையே வாசிப்புத்தன்மை, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், வரலாற்றை அறிவதற்காகவும் நூல கங்கள் தொடங்கப்படுகின்றன. மாண வர்கள், மக்களுக்கு பயன்படும் வகை யில் நூலகங்களுக்கு அதிக முக்கியத் துவம் தரப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர், மாவட்ட ஆட்சியரகத்தில் சுதர்சனம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்குழுவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற் றனர். ஆய்வின்போது மாவட்ட வரு வாய் அலுவலர் தெ.தியாகராஜன், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணை யர் ஆர். மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆர்.உஷா புண்ணிய மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.