நாமக்கல், மே 5- குமாரபாளையத்தில் குடி நீர் தொட்டிக்கு நகராட்சி நிர் வாகம் சார்பில் பந்தல் அமைக்கப்பட்டதற்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்ப தற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கடைகள் அகற்றப்பட்டன. பள்ளி, கல்லூரி, மாணாக்கர்கள், நகராட்சி கடை வியாபாரி கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தினந்தோறும் இங்கு வந்து செல்கின்றனர். கோடை வெப்பத்தில் தவிக் கும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு, தற்காலிக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் தினந்தோறும் நிரப்பப்பட்டு வருகிறது. வெப்பத்தின் காரணமாக பிளாஸ்டிக் டேங்கில் குடிநீர் சுடுநீராக மாறி விடுவதால் குடிநீரை பருக முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் டேங்க் மேல் பகுதி முழுவதும் சுற்றிலும் தென்னங்கீற்றுப்பந்தல் அமைக்கப்பட்டது. இதனால் குடிநீர் வெப்பம் இல்லாத நிலை யில் இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.