கடமலைக்குண்டு, மார்ச் 3- தேனி மாவட்டம் கும ணன்தொழு அருகே 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக் குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியரு மான, மூ.செல்வம் கள ஆய்வின்போது கண்டுபிடித் துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய தாவது: ‘‘குமணன்தொழு அரு கில், அருவா தீட்டுப் பாறை பகுதியில், மொக்கை என்பவ ரின் காட்டில் 3000 ஆண்டுகள் பழமையான 20-க்கும் மேற் பட்ட பெருங்கற்கால கல்வட் டங்கள், 5-க்கும் மேற்பட்ட நெடுங்கற்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. பல கல்வட் டங்களும் நெடுங்கற்களும் சிதைக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் கல்வட்டங்கள் 13 அடி விட் டம் கொண்டதாக அமைக் கப்பட்டி ருக்கின்றன. நெடுங் கல் அமைப்பு 5 1/2 அடி உய ரமும், 4 அடி அகலமும் கொண் டதாக உள்ளன. பெருங்கற் கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப் பகுதியில் காணக் கிடைக் கின்றன. குமணன் தொழுவிலி ருந்து வெள்ளையம்மாள் புரம், சின்னமனூருக்கு கால் நடையாக செல்வதற்கு பழ மையான பாதை ஒன்று இவ் வழியாக செல்கிறது. வழி நெடுகிலும் தீட்டுக் கற்கள் காணப்படுவதால் இப்பகுதி அருவா தீட்டுக் கணவாய் என இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. பெருற் கற்காலம் தொட்டு தற்கா லம் வரை தீட்டுக் கற்களில் அருவா உள்ளிட்ட ஆயு தங்களைத் தீட்டும் வழக்கம் இப்பகுதி மக்களிடையே தொடர்ந்து வருவது வியப் புக்குரியது. வருசநாடுப் பகுதியில் பெருங்கற்காலத் தில் அடர்த்தியாக மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்ப தற்குச் சான்றாக இந்த நினை வுச் சின்னங்கள் உள்ளன’’ என்றார்.