மயிலாடுதுறை ஜன.7 - மயிலாடுதுறை மாவட் டம் பொறையார் அருகே யுள்ள சங்கரன்பந்தலில் கட்டட பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவரும் நிறுவனருமான ஆர்.வி.பால்ராஜ் தலைமை வகித்தார். பொதுச் செய லாளர் ஓவியர் மணி கண்டன், பொருளாளர் மணிக் குமார், மகளிர் அணி தலை வர் அபிநயா, பொதுக்குழு உறுப்பினர் ஷேக், திமுக ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப் பினர் கல்யாணசுந்தரம் வர வேற்று பேசினார். இதில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், கட்டட பெயிண்டர்கள்- ஓவி யர்களுக்கு உயிர் காப்பீடு திட்ட அட்டை மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கி பேசினார். திமுக ஒன்றியச் செய லாளர் அப்துல் மாலிக், மே மாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் தெட்சிணாமூர்த்தி மற்றும் தேனி, திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, விழுப் புரம், கடலூர், நாகப்பட்டி னம், அரியலூர், மயிலாடு துறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். மாவட்டச் செயலாளர் எம். வில்லியம்ஸ் நன்றி கூறி னார்.