அரியலூர், ஜூலை 29 -
அரியலூர் மாவட்டத் தில் நவரைப் பட்டத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக குழுமூர், கோவிந்தபுத்தூர், அருள் மொழி, இடங்கண்ணி ஆகிய 4 இடங்களில் இரண்டாம் கட்டமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப் பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் தங்களது ஆதார், வயல் சிட்டா அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் கொடுத்து பதிந்து, நெல்லை விற்பனை செய்து பயனடையலாம் என ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரி வித்துள்ளார்.