ஆட்சியர் தகவல் திருச்சிராப்பள்ளி, மார்ச் 1 - இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக மார்ச் 3 (ஞாயிறு) அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதற்காக திருச்சி மாவட் டத்தின் கிராமப் புறங்களில் 1290 மையங்களிலும், திருச்சி மாநகராட்சியில் 290 மையங்களிலும் என மொத்தம் 1580 மையங்க ளில் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஞாயி றன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக் கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலை யங்கள், ரயில்வே நிலை யங்கள், விமான நிலையம், முக்கொம்பு போன்ற சுற்று லாத் தலங்கள் உட்பட 52 இடங்களில் குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாதவர் களுக்காக, 63 நடமாடும் குழுக் கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்து டன் இணைந்து திருச்சியி லிருந்து மற்றும் திருச்சி வழி யாக செல்லும் அனைத்து ரயில்களிலும் மார்ச் 3 முதல் 5 வரை ரயில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு உள்ளது. மார்ச் 3அன்று கிராமப் புறங்களில் 1,24,465 குழந் தைகளுக்கும், நகர்ப்புறங்க ளில் 65,630 குழந்தைகளுக் கும், இடம் விட்டு இடம் பெயர்ந்துள்ள 91 குழந்தை கள் மற்றும் அகதிகள் முகா மில் உள்ள 81 குழந்தை களுக்கு என மொத்தம் 1,90, 267 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக் கும் ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தா லும், மார்ச் 3 அன்று நடை பெறும் முகாமில் கட்டாயம் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது போலியோ நோயிலிருந்து முழு பாது காப்பை அளிக்கும். எனவே பெற்றோர் அனைவரும் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்து உள்ளார்.