districts

img

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் அரசாணையை திரும்பப் பெறக் கோரி மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம்

தஞ்சாவூர், பிப்.8-  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி, பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் அரசே நிர்வகித்து பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 20 முதல் பிப்ரவரி 28 வரை மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக, வெள்ளிக்கிழமை, பேராவூரணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டத்தலைவர் எஸ். கருப்பையன் தலைமை வகித்தார். வி.கலியமூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் துவக்க உரையாற்றினார். நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் ஜி.கருணாநிதி கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தலைவர் நாவலரசன், அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் கே. ரமேஷ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க வட்டப் பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.