districts

திருச்சி முக்கிய செய்திகள்

இன்று  முன்மனுக்கள் வழங்கலாம்

புதுக்கோட்டை, பிப்.7- புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி வட்டம், பூவத் தக்குடி சரகம், மேற்பனைக் காடு வருவாய் கிராமத்தில் 14.2.2024 (புதன்கிழமை) அன்று காலை 10 மணியள வில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, 8.2.2024 முதல் முன்மனுக்கள் பெற வுள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர் பான மனுக்களை அளித்து பய னடையுமாறு மாவட்ட நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

தேசிய சாலை  பாதுகாப்பு விழா

 அரியலூர், பிப்.7- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 35 ஆவது தேசிய சாலை பாது காப்பு மாத விழாவை முன் னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாகிரா பானு தலைமை வகித்தார்.  காவல் துணை கண்காணிப் பாளர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  முன்னதாக ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவரும் சாலை  விதிமுறைகளை கடைப்பிடிப் பது, விபத்தில்லா பயணம் மேற்கொள்ள உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கூட்டத் தில் போக்குவரத்து காவல் துறையினர், ஆட்டோ ஓட்டு நர்கள், டாட்டா ஏசி, மினி லாரி, கார், வேன் ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்திட்டமிடல் கூட்டம்

அறந்தாங்கி, பிப்.7- புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி வட்டார  வள மையத்தில் வட்டார கல்வி  அலுவலர் செழியன் தலை மையில் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கான முன்  திட்டமிடல் கூட்டம் தொடங்கியது. வட்டார கல்வி அலுவலர் இந்திராணி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பெற்றோரை கொண்டாடு வோம் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் மாநாடு நடைபெற உள்ளது.  இதில் தன்னார்வலர்கள் பங்குபெறுதல் மற்றும் ஆயத்தம் செய்தல் சார்ந்த வழி காட்டு நெறிமுறைகள் எடுத்து ரைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கி ணைப்பாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர் பயிற்று நர்கள் முத்துராமன், அங்கை யற்கண்ணி ஆகியோர் கலந்து  கொண்டனர்.

காரடைக்கன்பட்டி பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

மக்கள் ஆட்சியரிடம் மனு புதுக்கோட்டை, பிப்.7- விராலிமலை அருகே காரடைக்கன்பட்டியில் அரசு மதுபானக்கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, இராஜாலிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காரடைக்கன்பட்டி கிராமத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் என்.மாலிங்கம் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் கிராமத்தில் அரசு மதுபானக்கடை (டாஸ்மாக்) அமைய உள்ளதாக அறிகிறோம். இந்தக் கடை அமைய உள்ள இடத்திற்கு அருகிலேயே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தக் கடை வழியாகத்தான் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பயணித்து வருகின்றனர். இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான சிரமம் ஏற்படும். மேலும், மாணவர்கள் மதுபோதைக்கு ஆளாகும் சூழல் உருவாகிவிடும். எனவே, மாணவ-மாணவியர் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி இங்கு டாஸ்மாக் கடை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் அகில இந்திய  துணை தொழிற்தேர்வு

கரூர், பிப்.7 - அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் மாதம் நடை பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின்கீழ் 2017-2019-ல்  இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள  இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியா ளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு இந்தாண்டு மார்ச் மாதம் (for Semester System only) நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. துணைத் தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சி யாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற் பயிற்சி நிலையங்களை 15.2.2024 தேதிக்குள் தொடர்பு கொண்டு,  சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற்பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி துணைத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச்  2024, குறித்த தகவல்களை பெற http://skilltraining.tn. gov.in மற்றும் https://ncvtmis.gov.in ஆகிய இணைய தளங்களை அணுகலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள்  சங்க கொடியேற்று விழா 

தஞ்சாவூர், பிப்.7 -  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் இரண்டாம்புளிக்காடு, அழகியநாயகிபுரம், ஆண்டிக்காடு, கொள்ளுக்காடு, சோழகனார் வயல் ஆகிய இடங்களில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்  கொடி ஏற்றி பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி களில் மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் கொடியேற்றி வைத்தார். சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ்.ஜே.ராஜேஷ் கண்ணா, ஒன்றியச் செயலாளர் ஏ.மேனகா, ஊராட்சி மன்றத் தலைவர்  வளர்மதி நாகராஜ் மற்றும் கிளை நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

தொழிற் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், பிப்.7-  2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு, புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய  தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல்  ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வர வேற்கப்படுகின்றன.  இதற்கு 2.1.2024 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 2024-2025 ஆம்  கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற, ஒரு தொழிற்பள்ளி ஒரு இணைய தள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவ ரங்கள் அனைத்தையும் ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து  விண்ணப்பக் கட்டணம் ரூ.5000 மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8000  செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.2.2024. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.  மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகளை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம், தொலைபேசி எண்: 044-22501006 (113), 04362-278222,  மின்னஞ்சல் முகவரி detischennai @gmail.com, tnjadtrg2018@gmail.com இல் தெரிந்து கொள்ள லாம்.

பிஎஸ்என்எல்-க்கு  4ஜி, 5ஜி வழங்க வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, பிப்.7- பிஎஸ்என்எல்-க்கு 4ஜி, 5ஜி-யை உடனே வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்-க்கு 4ஜி, 5ஜியை உடனே வழங்க வேண்டும். ஊழி யர்களுக்கு 3 ஆவது ஊதிய மாற்றம்  வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற வர்களுக்கு பென்சன் மாற்றம் உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழி யர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். சமூக கடமை களை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  பிஎஸ்என்எல்இயூ, ஏஐபிடிபிஏ, டிஎன்டிசிடபிள்யூயூ சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவட்ட சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. பிஎஸ்என்எல் திருச்சி மண்டல பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் புதனன்று நடந்த கருத்தரங்கிற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் சின்னையன் தலைமை வகித்தார். ஏஐபிடிபிஏ மாநிலச் செய லாளர் ராஜசேகர், பிஎஸ்என்எல்இயூ மாநில உதவி செயலாளர் கல்யாணராமன், டிஎன்டிசிடபிள்யூயூ மாநிலச் செயலாளர் சையத்  இத்ரிஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக ஒருங்கிணைப் பாளர் சுந்தர்ராஜ் வரவேற்றார். ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் முபாரக் அலி நன்றி கூறினார்.

ஆதியன், மலைகுறவன் பழங்குடியினர் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு

மயிலாடுதுறை, பிப்.7 - செம்பனார்கோயில் பகுதியில் வசிக்கும் பழங் குடி மக்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட னர். மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோயில் ஆறு பாதி காவல் நிலையத் திற்கு எதிரே இந்து ஆதி யன் மற்றும் இந்து மலைக் குறவன் சமூகத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்காத நிலையில், அவர்களை வாக் காளர் பட்டியலில் சேர்க்கும்  சிறப்பு முகாம் தரங்கம் பாடி வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது.  இந்து ஆதியன் மற்றும்  மலைக்குறவன் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்க ளுக்கு ஆதார் மற்றும் குடும்ப  அட்டை இல்லாத நிலை யில், கடந்த ஆண்டு அப் போதைய வட்ட வழங்கல் அலுவலர் பாபு முயற்சியில் குடும்ப அட்டை வழங்கப் பட்டது. இதனால் அந்த குடும்பத்தினர் அரசு வழங் கும் இலவச பொருட்களை வாங்கி பயனடைந்து வரு கின்றனர். இந்நிலையில் இவர்கள் இதுவரை எந்தவொரு தேர்தலிலும் தங்களின் வாக்குரிமையை செலுத்தாத நிலையில், இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்காக தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், 17 பேரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முகாம் நடை பெற்றது.  தரங்கம்பாடி வட்டாட் சியர் சரவணன், தேர்தல் துணை வட்டாட்சியர் பாபு முகாமை ஒருங்கிணைத்து ஆதாரங்களை சேகரித்து வாக்காளர் பட்டியலில் இணைத்தனர். முகாமில் மண்டல துணை வட்டாட் சியர் பாலமுருகன், முது நிலை வருவாய் ஆய்வாளர் பாலாஜி  ஆகியோர் உட னிருந்தனர்.

வேளாண் விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி, பிப்.7- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி ஊராட் சியில் வேளாண் விற்பனைத்  துறை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்கு நர் சங்கரலட்சுமி, வேளாண்மை அலுவலர் சுபாஷினி உள்ளிட்டோர் வேளாண் வணிகத் துறை யில் செயல்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

ஒன்றிய மோடி அரசை கண்டித்து இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம்

‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

திருச்சிராப்பள்ளி, பிப்.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில உரி மைகள் மீதான தாக்குதல், எதிர்க்கட்சி ஆளும் மாநி லங்களை நிதி பகிர்வில் வஞ்சிப்பது, இடி, ஐ.டி  போன்ற ஒன்றிய அமைப்பு கள் மூலம் எதிர்க்கட்சி தலை வர்களை பழிவாங்குவது, அத்துமீறும் ஆளுநரையும், அடாவடி செய்யும் மோடி அரசையும் கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழன் (பிப்.8) அன்று காலை 10 மணியளவில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா தலைமை வகிக்கிறார். சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் முன்னிலை வகிக்கிறார். ஆர்ப்பாட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் கி. விரமணி, நகர்ப்புற உள் ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மேயர் மு.அன்பழகன் மற்றும்  திமுக, காங்கிரஸ், சிபிஐ,  மதிமுக, விசிக, முஸ்லீம் லீக்,  மமக, திக நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றுகின்ற னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த நண்பர்கள், தோ ழர்கள் பெருந்திரளாக கலந்து  கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

புதுக்கோட்டை, பிப்.7- இலங்கைத் தமிழர்களுக்கான உரிமை களைப் பெற்றுத் தருவதற்கு தமிழ்நாடு அரசு  உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது என்றார் மாநில சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்  நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்.  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லெம்பலக்குடியில் உள்ள இலங்கை  தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை திறந்து வைக்க செவ்வாய்க்கிழமை வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  இலங்கை தமிழர்களின் முகாம்கள் 106  இருக்கின்றன. அந்த முகாம்களில் உள்ள 20,000 குடும்பங்களுக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க  வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேற்றி, ஒன்றிய அரசிடம் அனுப்பி யுள்ளோம். எதிர்காலத்தில் இந்தியா கூட்டணி  வெற்றி பெற்று இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கைத் தமிழர்களில் உள்ள மாண வர்கள் பொறியியல், வேளாண்மை கல்லூரி களில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி  வழங்கும். மருத்துவக் கல்லூரியில் சேர்வ தற்குத்தான் சட்ட சிக்கல் இருக்கிறது. ஒன்றிய அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட  பிறகு, நீட் தேர்வு என்ற அரக்கனை அகற்றி விட்டு, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடிவு காலம் வரும்போது நம்மோடு இருக்கின்ற இலங்கை தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமமானது. நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்; மதிக் கிறோம். அதில் ஏதும் சிக்கல் இருந்தால் அரசு மேல்முறையீடு செய்யும். இவ்வாறு அமைச்சர் பேட்டியளித்தார்.