சின்னாளப்பட்டி, ஜூன் 29-
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக் குண்டு அருகே விருவீட்டில் புதிய சுத்தி கரிக்கப்பட்டகூட்டு குடிநீர் தொட்டி அமைக் கப்பட்டது.
இதன் திறப்பு விழாவுக்கு வத்த லக்குண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமை வகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர் கே.பி.முரு கன், மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் முத்து, வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மாவதிஆகியோர் முன்னிலை வகித்தனர்.விருவீடு ஊராட்சி மன்ற தலைவர் தர்மர் வரவேற்றார். திண் டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச் சாமி குடிநீர் தொட்டியை திறந்து வைத்து பேசினார். இதில் திமுக ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.