districts

img

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நூலகம் திறப்பு

புதுக்கோட்டை, மே 19-  

   புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பயன்பாட்டிற் காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள நூலகத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

   இந்த நூலகத்தில் சமூகவியல், பயன்படு கலை கள், இலக்கியம், நுண் கலைகள், மருத்துவம், சித்து இயல், கவிதை, கல்வி, சிறுவர் கதைகள், அறிவியல் மற்றும் பொதுமை, சமயம், வாழ்க்கை வரலாறு, கட்டுரை  நூல்கள், ஆங்கில நூல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

  விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து. தங்கவேல், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நல அலுவலர் கி.கருணாகரன், வழங்கல் அலுவலர்  ஆர்.கணேசன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெய ஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.