புதுக்கோட்டை நகராட்சி, காந்தி பூங்கா அருகில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.194.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடத்தை வெள்ளியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.