மயிலாடுதுறை, ஜன.4 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், வானகிரி கிராமத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி இறங்குதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழனன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் குத்துவிளக்கேற்றி வைத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “மயிலாடுதுறையிலிருந்து கிழக்கே 28 கி.மீ தொலைவில் வானகிரி மீனவ கிராமம் அமைந் துள்ளது. இக்கிராமத்தில் சுமார் 3401 மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 46 விசை படகுகளும், 222 பைபர் படகுகளும் உள்ளன. இக்கிராம மக்கள் மீன்பிடி தொழி லையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வரு கின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத் தும் வகையில் வானகிரி மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைக்க ரூ.8 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டு, படகு அணையும் சுவர், வலைப்பின்னும் கூடம், மீன் ஏலக்கூடம், தூர்வா ரும் பணி ஆகிய வசதிகளுடன்கூடிய தளம் வியா ழனன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் மீனவர்கள் ஆண்டு முழுவதும் மீன்பிடிக்கச் செல்வதற்கும், அவர்களின் படகு மற்றும் இதர உபகரணங்களை பாதுகாத்து வைப்பதற்கும் மீன்பிடித் தொழிலை ஊக்கு விக்கவும், மீன்களை சுகாதார முறையில் கை யாள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சின்னமேடு மீனவ கிராமத்தில் ரூ.9. 78 கோடி மதிப்பீட்டில் சிறிய நேர்கல் சுவர், மீன் ஏலக்கூடம், சாலை வசதிகள், தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகிய வசதிகளுடன்கூடிய மீன் இறங்குதளமும் திறந்து வைக்கப்பட்டுள் ளது. இதனால் மீனவர்கள் ஆண்டு முழுவ தும் மீன் பிடிக்க செல்வதற்கும், கடல் அரிப்பு தடுக்கப்பட்டு படகு மற்றும் இதர உபகரணங் களை பாதுகாத்து வைக்கவும் வழிவகை செய் யப்பட்டுள்ளது” என்றார்.