பெரம்பலூர், ஜூன் 18-
பெரம்பலூர் மாவட் டம் பறவை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி தெய்வமணி (35) சம்பவத்தன்று தெய்வ மணியும், மேட்டுத்தெரு பர்கூரைச் செல்வராஜ் (44) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரம் வேகத்தடை அருகே சென்று கொண் டிருந்தனர். அப்போது வேகத்தடை இருப்பது தெரியாமல் எதிர்பாராத விதமாக செல்வராஜின் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதில் தெய்வமணி பின்பக்க மாக கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த வந்த டிராக்டர் மோதியதில் தெய்வமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண் டம் காவல்துறையினர் விசாரித்தனர்.