ஊட்டச்சத்து வார விழா பேரணி
அரியலூர், மார்ச் 12- ஊட்டச் சத்து வார விழாவையொட்டி, அரிய லூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடை பெற்றது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்ர்ணா பேரணியை கொடிய சைத்து தொடக்கி வைத் தார். பேரணியானது அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பல்துறை அலுவலக வளாகம், அரியலூர் நகராட்சி அலு வலகம் வழியாக சென்று அரியலூர் அண்ணா சிலை அருகில் நிறைவ டைந்தது. பேரணியில், ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலர் அன்பரசி, வட்டார அலுவலர்கள் கலந்து கொண்டனர்
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
அரியலூர், மார்ச் 12 - அரியலூர் அரசு தொழில்பயிற்சி நிலை யத்தில், மாவட்ட பொது சுகாதாரத் துறை மற்றும் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் புகையிலை பொருள்கள் ஒழிப்பு மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற் பார்வையாளர்கள் வகீல் மற்றும் சிவசங்கரன் ஆகியோர், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ரத்த தானம் செய்வதன் அவசி யம் குறித்து பேசினார். பயிற்சி நிலைய அலுவ லர்கள் வாசியமலை, கண்ணன், நிலைய மருந் தாளுநர் மதியழகன் ஆகியோர் பேசினர்.
விபத்தில் திமுக பிரமுகர் பலி
அரியலூர், மார்ச் 12- அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் உயிரிழந்தார். விக்கிரமங்கலம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (60). விவசாயியான இவர், திமுக தா.பழூர் மேற்கு ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் திங்களன்று இவர், வழக்கம் போல் தனது இருசக்கர வாக னத்தில் வயலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும் பினார். கோரைக்குழி அருகே வந்தபோது, இவ ரது வாகனமும், எதிரே கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் (35) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய தில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரிய லூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரு வரையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சௌந்தரராஜன் ஏற் கனவே இறந்துவிட்டது தெரிந்தது. பாக்கியராஜ் சிகிச்சை பெற்று வரு கிறார். விபத்து குறித்து விக்கிரமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
அரியலூர், மார்ச் 12 - ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொ டுமை செய்தவர் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஏலாக்குறிச்சி சுள்ளங் குடி கிராமத்தைச் சேர்ந்த வர் ராஜா(36). இவர், பன்னி ரண்டாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாகக் கூறி கடத்திச் சென்று, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து, பாலி யல் வன்கொடுமை செய் துள்ளார். இதுகுறித்து சிறுமி யின் பெற்றோர் ஜெயங் கொண்டம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார், ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்ற னர்.
மார்ச் 25 முதல் வாரத்தில் 7 நாட்களும் நவக்கிரக கோவில்களுக்கு ஏசி வசதியுடன் மேலும் ஒரு சிறப்பு பேருந்து இயக்கம்
அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் கும்பகோணம், மார்ச் 12 - நவக்கிரக கோவில்களுக்கு மார்ச் 25 முதல் வாரத்தில் 7 நாட்களும், குளிர்சாதன வசதியுடன் கூடுதலாக ஒரு சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில், கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நவகிரக ஸ்தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து கடந்த பிப்ரவரி 24 முதல் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து, பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து, வயதானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க, குளிர்சாதன வசதியுடன் மேலும் ஒரு சிறப்பு சுற்றுலா பேருந்து மார்ச் 25 முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்பட உள்ளது. குளிர்சாதன வசதியுடன்கூடிய சிறப்பு சுற்றுலா பேருந்தில் நபர் ஒருவருக்கு ரூ.1350/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டலத்தின் சார்பில் கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து, அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணியளவில் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தடையும்” என்றார். மேலும், குளிர்சாதன வசதியுடன்கூடிய நவக்கிரக சிறப்பு சுற்றுலா பேருந்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், www.tnstc.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆண்ட்ராய்டு கைப்பேசி (மொபைல் ஆப்) மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள இயலும். நேரடியாக பேருந்தில் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர் சங்கத்தின் மகளிர் தின சிறப்பு கூட்டம்
ஓய்வூதியர் சங்கத்தின் மகளிர் தின சிறப்பு கூட்டம் கும்பகோணம், மார்ச் 12- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், சர்வதேச மகளிர் தின சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மகளிர் துணைக் குழு வட்ட துணை தலைவர் கலைச்செல்வி, தலைமையில் நடை பெற்றது. அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்டத் தலை வர் துரைராஜ், வட்டச் செயலாளர் பக்கிரிசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன், மாதர் சங்கம் மாநக ரச் செயலாளர் சுமதி, மாநில உதவிச் செயலாளர் கிரிஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் பேருந்துகளில், பாபநாசம், அய்யம்பேட்டை செல்லும் பயணிகள் மற்றும் பெண் பயணிகள் கடைசி யில் ஏறலாம் என்று சொல்வதை கைவிட வேண்டும். கும்ப கோணம் மாநகரம் முழுவதும் பெண்கள் அதிகமாக கூடும் இடங்களில், மாநகராட்சி நிர்வாகம் இலவச கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓய்வூதியர் நலன் காக்க வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, மார்ச் 12 - தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் திருச்சியில் பெருந்திரள் தர்ணா நடைபெற்றது. பிரிக்கப்பட்ட மின் வாரிய நிறுவனங்கள், பஞ்சாப் மாநிலத்தில் உள்ளதை போன்று அரசு நிறுவனங்களாக தொடர உத்தரவாதம் அளிக்க வேண்டும். தொடர்ந்து ஓய்வூதியம் வழங்குவதற்கு தமிழக அரசு முழு பொறுப் பேற்க வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஓய்வூதியர் நலன் காத்திட தமிழக முதல்வர் தலையிட வேண்டும். 1.4.2003-க்குப் பிறகு நிரந்தரப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தர்ணா நடந்தது. போராட்டத்திற்கு சங்க திருச்சி கிளைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு புற நகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், சங்க திருச்சி கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டச் செயலாளர் எஸ்.கே.செல்வராஜ், வட்டத் தலைவர் நடராஜன், வட்ட பொரு ளாளர் பழனியாண்டி, துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். சங்க மாநில துணைத் தலைவர் பஷீர் நிறைவுரை ஆற்றினார். துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
வாக்குச்சாவடி மையம் இடமாற்ற கலந்தாய்வுக் கூட்டம்
வாக்குச்சாவடி மையம் இடமாற்ற கலந்தாய்வுக் கூட்டம் அரியலூர், மார்ச் 12- மின்னணு வாக்குப் பதிவு இயந்திர சேமிப்பறை கிடங்கு, காலாண்டு ஆய்வு மற்றும் வாக்குச் சாவடி மையம் இடம் மாற்றம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடை பெற்றது. ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், அரியலூர் சட்டப் பேரவைத் தொகுதி யில் 6 வாக்குச் சாவடி மைய கட்டடம் மாற்றமும், 2 வாக்குச் சாவடி மையம் அமைவிட மாற்றமும் செய்யப்பட வேண்டும். அதேபோல் ஜெயங்கொண்டம் தொகுதியில் 4 வாக்குச்சாவடி மைய கட்டட மாற்றமும் செய்ய வேண்டியுள்ளதாக அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தெரி விக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)சுமதி, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பனைமரம் ஏறும் இயந்திரம் கண்டுபிடிப்போர் விண்ணப்பிக்கலாம்
அரியலூர், மார்ச் 12 - சிறந்த முறையில் பனை மரம் ஏறும் இயந்திரம் கண்டு பிடிப்போருக்கு, தோட்டக்கலைத் துறை சார்பில் விருது வழங்கப்பட உள்ளது என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சி யர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா. இதுகுறித்து ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மர சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு பனை மேம்பாட்டு இயக்கத்தின்கீழ் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை ஏறும் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்குதல் போன்றவற்றுக்கு மாநில அளவில் ரூ.1.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பனை மரத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி எளிதாக ஏறுவதற்கான கருவிகளைக் கண்டுபிடிக்கும் பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னோடி விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறந்த பனை ஏறும் இயந்திரம், கருவி கண்டுபிடிக்கும் ஒருவருக்கு விருது வழங்க ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறந்த பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பாளர்கள் தோட்டக் கலைத்துறையால் தேர்வு செய்யப்படவுள்ளனர். பனை ஏறும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும் தன்னார்வ லர்கள், பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளம் வாயிலாக மார்ச் 15-க்குள் விண்ணப் பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையினர் போராட்டம்
தஞ்சாவூர், மார்ச் 12 - இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களையும், வட்டார வளர்ச்சி அலுவலர் களையும் அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி கொலை மிரட்டல் விடுத்து, அராஜக செயல்களை செய்த, ஒன்றியக் குழு துணைத் தலைவர் தீனதயாளன் மீது குற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க் கிழமை பிற்பகல் 1 மணிக்கு தஞ்சை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியரகத்திலும் (வளர்ச்சி பிரிவு அலுவலகங்கள்) பணி புரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், அரை நாள் வெளிநடப்பு செய்தனர்.
காவல்துறை மோப்ப நாய் டிக்ஸி உயிரிழப்பு
அரியலூர், மார்ச் 12 - அரியலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கும் மோப்பநாய் பிரிவில் டிக்சி, மலர், பினா, ரோஸ் உள்ளிட்ட மோப்ப நாய்கள், கடந்த 8 ஆண்டுகளாக துப்பறியும் பணி யில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் டிக்சி என்ற மோப்ப நாய், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதை யடுத்து ஒரத்தநாடு அரசு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதித்து அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டிக்சிக்கு முதுகு தண்டுவட புற்று நோய் பாதிப்பு இருந்ததால், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை மோப்ப நாய் டிக்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த மோப்ப நாய் டிக்சி, மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துப்பறியும் பணியை சிறப்பாக செய்துள்ளது. இறந்த டிக்சியின் உடல் மோப்பநாய் பிரிவு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டது. காவல்துறையினர் அதற்கு மாலை அணிவித்து, 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர்.
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.11 கோடி மோசடி 3 பேர் மீது வழக்குப் பதிவு
தேனி, மார்ச் 12- பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் திர வியம் மகன் சிவபாலன் (27). இவரின் உறவினர் தேனி ஊஞ்சாம்பட்டி ரத்தினம் நகரை சேர்ந்த முருகேசன் மகன் குகன் ராஜா என்பவர் மூலம் சென்னை ஆவடி, கோவில் பதாகை பகுதியை சேர்ந்த பூகீஸ்வரன், அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோரிடம் சிவபாலன் மற்றும் 7 பேருக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரொக்கமாக ரூ.38,61,000-ம், வங்கி மூலம் ரூ.73,28,500-ம் சேர்த்து ரூ.1,11,89,500 கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கி கொண்டு வேலை வாங்கி தரா மல் மோசடி செய்ததாக சிவபாலன் தேனி மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் ஆவடி, கோவில் பதாகை பகுதியை சேர்ந்த பூகீஸ்வரன், அவரது மனைவி ஜெயஸ்ரீ, குகன்ராஜா ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
போலி கையெழுத்து மூலம் ஆவண மோசடி: ஒருவர் கைது
தேனி, மார்ச் 12- பெரியகுளம் வடகரை ஸ்டேட் பாங்க் காலனி பகுதி யைச் சேர்ந்தவர் மா.திவ்யா(33). இவர் கடந்த ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரை உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணிபுரிந்தார். பின்பு பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இடமாறுதலில் வந்தார். இந்நிலையில் உத்தமபாளையத்தில் இவரது கையெ ழுத்து மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் சீல் ஆகியவற்றை கெஸடட் ஆபீஸர் கையொப்பமாக போலியாக பயன்படுத்தி பல் வேறு ஆவணங்கள் பெறப்படுவதாக தகவல் வந்தது. விசாரணையில், கம்பத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது ஆதார் கார்டில் இருப்பிட மாறுதல் செய்வ தற்கான விண்ணப்பத்தில் இந்த மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திவ்யா உத்தமபாளையம் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். விசாரணையில் கம்பம் தாத்தப் பன்குளத்தைச் சேர்ந்த தாஜூதீன் (54) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தாஜூதீனை காவல்துறையினர் கைது செய்தனர்.