மயிலாடுதுறை, டிச.27 - மயிலாடுதுறையில் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கடைகளுக்கு சீல் வைக்க வந்த அறநிலையத்துறை அதிகாரிகளின் அடாவடித்தனத்தை தடுத்து நிறுத்தி தமிழ்நாடு அடிமனை பய னாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி யினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை நகரின் முக்கி யப் பகுதியான கிட்டப்பா அங்கா டியை ஒட்டிய காந்திஜி சாலை யில், அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் உள்ளது. தனி யாருக்கு சொந்தமான இக்கோயி லின் இடத்தில் சிறிய அளவிலான 50 கடைகள் மற்றும் 15-க்கும் மேற் பட்ட ஏழைகள் வசிக்கக் கூடிய வீடு களும் உள்ளன. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடங்களுக்கு வாடகை செலுத்தப்பட்டு வந்த நிலையில், தனியார் வசமிருந்த அந்த கோ விலை இந்துசமய அறநிலையத் துறை கைப்பற்றி, ஒவ்வொரு கடை களுக்கும் நியாய வாடகை என்ற பெயரில் மாதந்தோறும் 7,500 ரூபாய் என அநியாயமாக நிர்ண யித்தது. அதோடு, மூர்த்தி என்ப வர் வைத்துள்ள 3 கடைகளுக்கு மட்டும் ரூ.5.81 லட்சத்தை வாட கையாக நிர்ணயித்து, 15 நாட்க ளுக்குள் கட்டிவிட வேண்டுமென மிரட்டியுள்ளது. இதையடுத்து, இப்பிரச்சனை சம்பந்தமாக நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டு, அந்த வழக்கு நிலுவை யில் உள்ளது. திரௌபதி அம்மன் கோவில் ‘தனியார் கோயில்’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில்தான், புத னன்று அதிகாலையிலேயே அற நிலையத்துறை உதவி ஆணை யர் முத்துராமன், ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் கோமதி, மயி லாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமார் ஆகியோர் தலைமையில் காவ லர்களை குவித்து, மயிலாடுதுறை வட்டாட்சியர் சபிதா தேவி மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் 3 கடைகளையும் பூட்டி சீல் வைக்க வந்தனர். தகவலறிந்த தமிழ்நாடு அடி மனை பயனாளிகள், குத்தகை விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ராயர், மாவட் டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய் ஆகி யோர் தலைமையில், அச்சங்கத் தின் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.துரைராஜ், மார்க்சி ஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வா கிகள், கடை வியாபாரிகள், திரௌ பதி அம்மன் ஆலய இடத்தில் குடி யிருப்பவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளின் அடாவடித் தனத்தை தடுத்து நிறுத்தி போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடை பெற்றது. நீதிமன்றம் மூலம் ஒரு மாதத்திற்கு கால அவகாசம் வழங்குவதாக உறுதியளித்த தையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது. இப்போராட்டம் குறித்து தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் கூறு கையில், “அப்பாவி மக்களை அச்சு றுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயல்படு கிறது. அந்த துறையில் உள்ள அதிகாரிகளுக்கு நல்ல அறிவுரை களை துறையின் அமைச்சர் சேகர் பாபு வழங்க வேண்டும்” என்றார். 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால் மயி லாடுதுறை நகர் முழுவதும் போராட் டக் களமாக காணப்பட்டது குறிப் பிடத்தக்கது.