districts

நகைக் கடனை தள்ளுபடி செய்ய அதிகாரிகள் உறுதி

தஞ்சாவூர், டிச.16- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சேதுபா வாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்க உறுப்பினர்கள் சார்பில், குருவிக்க ரம்பை கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடி யில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். புதிய பயிர்க் கடன்களை கால தாமதமின்றி வழங்கிட வேண்டும்.  ஏற்கனவே நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில், ஒப்புக் கொண்டவாறு, ரெட்ட வயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்  சங்கத்தில் கரும்பு விவசாயிகளுக்கு புதிய  பயிர்க் கடன் வழங்க வேண்டும். முறை கேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து  விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  உர விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ரசாயன உரங்கள் வாங்கும் போது,  மற்ற பொருட்களை வாங்க நிர்ப்பந்தம் செய்யக் கூடாது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தை  டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி டிசம்பர் 16 அன்று  குருவிக்கரம்பை மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் என்.வி.கண்ணன், ஒன்றியச் செய லாளர் வீ.கருப்பையா பங்கேற்கவுள்ள ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதனன்று மாலை பேரா வூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட் சியர் சுகுமார் தலைமையில் சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றியச் செய லாளர் வீ.கருப்பையா, ஆர்.எம்.வீரப்பெரு மாள், ஆர்.எஸ்.வேலுச்சாமி, வி.ஆர்.கே. செந்தில், பாலசந்தர், குருவிக்கரம்பை விவசா யிகள் கோ.ராமசாமி, அருள்மணி, பெரமன்,  ராஜா, குழந்தைசாமி, ராமமூர்த்தி, ராஜேந் திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசுத் தரப்பில், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் ஜெயபாலன், காவல் துறை, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக  அலுவலர், கூட்டுறவு சங்க அதிகாரிகள், செய லாளர் சத்தியமூர்த்தி, மாதவன் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.  இதில், குருவிக்கரம்பை வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் பெற்ற 35  நபர்களுக்கும், அரசுக்கு முன்மொழிவு அனுப் பப்பட்டு, ஒரு வார காலத்தில் நகைக் கடன் தள்ளுபடி பெற்று தரப்படும். புதிய நகைக்கடன் வழங்கப்படும். கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடியில் தொடர்புடைய நபர்கள்  மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்ப டும் என அதிகாரிகளால் உறுதி அளிக்கப்பட் டது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.