districts

சுதந்திரப் போராட்ட வீரரின் மகள் மன்னார்குடிக்கு வருகை

மன்னார்குடி, ஜுலை 9-

     26.1.1932 அன்று நள்ளிரவு. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரத்தில் ஏறி பிரிட்டிஷ் ஜாக் கொடியை கிழித்தெறிந்து விட்டு, மூவர்ணக்கொடியை ஏற்றிய சுதந்திரப் போராட்ட வீரரும் மன்னார்குடிக்கு அருகில் உள்ள சேரன்குளம் என்னும் கிராமத்தைச் சார்ந்தவருமான ஆர்யா என்கிற பாஷ்யம் ஐயங்காரின் மகள் லட்சுமி மன்னார்குடிக்கு வருகை தந்தார்.

    அவரை மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்த லைவர் மனோகரன், சேரன்குளம் ஊராட்சி மன்ற தலை வர் அமுதா, தமுஎகச தலைவர் கே.வி.பாஸ்கரன், அறிவி யல் இயக்க துணைத் தலைவர் இரா.ஏசுதாஸ் உள்ளிட் டோர் வரவேற்றனர். சேரன்குளம் கிராமத்தில் உள்ள  பொது நூலக வளாகத்தின் நினைவுத்தூண், கொடிமரம்  ஆகியவற்றை பார்வையிட்ட லட்சுமி, நூலகத்திற்கு தனது  தந்தை ஆர்யா வரைந்த ஓவியத்தை நினைவுப் பரிசாக  வழங்கினார்.