districts

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

அறந்தாங்கி, ஜூன் 1-  

     புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மற்றும் தொடக்க நிலை  மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மண மேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும்  பயிற்சியினை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  ஜீவானந்தம் தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார கல்வி அலுவ லர்கள் செழியன் மற்றும் இந்திரா ராணி ஆகியோர் முன்னிலை வகித்த னர். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோ கம் வரவேற்றார். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கிற அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி பாடவாரி யாக வழங்கப்பட்டது.

 பாபநாசம்

     தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் 4, 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் முதல் பருவ பயிற்சி நடந்தது. பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெயமீனா, மணிகண்டன் தொடங்கி  வைத்தனர். 6 கருத்தாளர்கள் பயிற்சியளித்தனர். இதில் பாபநாசம் வட்டாரத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரி யர்கள் 104 பேர் பங்கேற்றனர். பயிற்சியை பால்ராஜ் ஒருங்கிணைத் தார். பயிற்சிக்கு பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலை மையாசிரியர் மணியரசன் தலைமை வகித்தார்.