districts

பணிக்கம்பட்டியில் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா

திருப்பூர், ஜூலை 1 - பல்லடம் ஒன்றியம்  பணிக்கம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கொடி ஏற்று விழாவும், பள்ளி குழந் தைகளுக்கு புத்தகம் நோட்டு வழங்கும் விழாவும் நடந்தது.   மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றி னார்.  இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் நோட்டு  வழங்கப்பட்டது. பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசி வம், பல்லடம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள்  முருகசாமி, ராஜேந்திரன் மற்றும் அக்ரி பிரகாஷ், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க ஒன்றிய செயலாளர் சி.முருகேஷ் , கோபால், பாலசுப் பரமணியம், ராமானுஜம் மாதர் சங்க நிர்வாகி சித்ரா உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர். பணிக்கம்பட்டி கிராம மக்கள்  குழந்தைகள் திரளாக பங்கேற்றனர்.