districts

கடந்த மாத மின் கட்டணத்தையே செலுத்தச் சொல்லும் வடபாதிமங்கலம் மின் வாரியம்

திருவாரூர், ஆக.30 - மின் வாரியத்தில் போதிய பணியாளர் களை நியமிக்க வேண்டுமென சிபிஎம் கோரி யுள்ளது. திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத் தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்  கணக்கீடு பணி செய்ய போதிய பணியா ளர்கள் இல்லை.  இதனால் 2023 ஆகஸ்ட் மாத கணக் கீட்டிற்கு, ஜூன் மாதம் செலுத்திய மின்  கட்டணத்தையே செலுத்துமாறு பழைய னூர், கானூர், சாத்தனூர், சித்தாம்பூர், வெள்ளக்குடி, வேளுக்குடி ஆகிய பகுதி களைச் சேர்ந்த மின் நுகர்வோருக்கு தகவல்  தெரிவிக்கப்படுகிறது என வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் ஒரு தினசரி நாளி தழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன் தெரிவிக்கையில், மின்வா ரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளர் உள்ளிட்ட பணிகளில் ஆள் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் கடந்த மாத பில்  கணக்கீட்டுத் தொகையை, இந்த மாதம்  கட்டலாம் என அறிவிப்பு வெளியிட்டிருப் பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏற்கனவே  மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் ஒரு வகையான மின் கணக்கீடு தொகை அமைந் திருக்கும். அதே கணக்கீட்டை இந்த மாத மும் செலுத்த வலியுறுத்துவது பொருத்தம் அல்ல. இது மக்களுக்கு சுமையை ஏற்படுத் தும். எனவே மின் வாரியத்தில் உடனடி யாக பணியாளர்களை நியமித்து உரிய முறையில் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.