சிஐடியு கரூர் மாவட்ட உதவிச் செயலாளரும், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினருமான ஹோ-சி-மின்- வெண்ணிலா தம்பதியின் மகள் பிரியங்கா மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரின் திருமணம் சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்றது. இதில் நிர்மல் பள்ளி நிதியாக ரூ.5000, சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்திடமும், தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.5000, கட்சியின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ரத்தினவேலு, கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு ஆகியோரிடமும் வழங்கப்பட்டது. சிஐடியு, சிபிஎம் உறுப்பினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.