districts

img

நவீன பட்டாசுகளை காட்சிப்படுத்திய புத்தாண்டு வாண வேடிக்கை

விருதுநகர், ஜன.1- விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட பட்டாசு களை காட்சிப்படுத்திய புத் தாண்டு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத் தின் பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கி வருவது பட்டாசுத் தொழிலா கும். 100 ஆண்டுகள் கடந்  தும் இத்தொழில் சிவகாசி  மற்றும் அதன் சுற்றுவட்டா ரப் பகுதியில் தொடர்ந்து சிறப்பான முறையில் நடை பெற்று வருகிறது. இங்குள்ள ஆயிரத்திற் கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்  சாலைகளின் மூலம் லட்சக்க ணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.   இந்த நிலையில், பட்டா சுத் தொழிலின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகை யிலும்,  நவீன தொழில்நுட் கங்களுடன் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பொதுமக்க ளுக்கு காட்சிப்படுத்தும் வித மாகவும் புத்தாண்டு சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகாசி சோனி  மற்றும் அணில் பட்டாசு  ஆலைகளில் தயாரிக்கப் பட்ட புதிய  பட்டாசு ரகங்கள் வெடிக்கப்பட்டன. வானில் வர்ண ஜாலங்களுடன் வித விதமான பட்டாசுகள் வெடி த்துக் காண்பிக்கப்பட்டது. அப்போது, இதைக் கண்ட  பொதுமக்கள் உற்சாகத்  தில் துள்ளிக் குதித்தனர்.  முன்னதாக, மேடையில் பல்வேறு கலை நிகழ்ச்சி களும் நடத்தப்பட்டன.   இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலு வலர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.