தூத்துக்குடி, செப். 10 தூத்துக்குடியில் நடைபெற்ற தேசிய அளவிலான கடல் சாகசப் போட்டிகளில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியன் கயாக்கிங் - கனோயிங் அசோசியேஷன், தமிழ்நாடு அசோசியேஷன் ஆஃப் கயாக் - கனோயிங் சார்பில் தென் தமிழகத்தில் முதல்முறையாக பியர்ல் சிட்டி ஓஷன் ஸ்போட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியான கடல் சாகசப் போட்டி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வெள்ளிக்கிழமை தொடங்கி யது. இதில், நின்றுகொண்டே துடுப்பு வலித்தல், அமர்ந்திருந்து துடுப்பு வலித்தல் என இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட 13 மாநிலங்கள், இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவினர் என மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. 2 நாள்கள் நடைபெற்ற இப்போட்டிக்கான பரிசளிப்பு விழா முத்துநகர் கடற்கரையில் சனிக்கிழமை நடை பெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள், சான்றி தழ்கள், சுழற்கோப்பை ஆகியவற்றை வழங்கிப் பாராட்டினார். முதல் பரிசாக தங்கப் பதக்கம், ரூ. 10 ஆயிரம், 2ஆம் பரிசாக வெள்ளிப் பதக்கம், ரூ. 7 ஆயிரம், 3ஆம் பரிசாக வெண்கலப் பதக்கம், ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டன. விழாவில், தூத்துக்குடி அக்வா அவுட்பேக் நிர்வாக இயக்குநர் அர்ஜூன் மோத்தா, ஒருங்கிணைப் பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.