கும்பகோணம், ஜூலை 21 -
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 அன்று தேசிய மாம்பழ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனொரு பகுதி யாக கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளிக் குழந்தை கள் மாம்பழ வேடம் அணிந்து கொண்டாடினர்.
பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பன்னாட்டு பள்ளி தாளா ளர் பூர்ணிமா கார்த்திகேயன் ஆகியோர் மாம்பழத்தின் சிறப்பு களை எடுத்துரைத்தனர். இதில் குழந்தைகள் மாம்பழ உடை அணிந்து, மாம்பழம் குறித்த பாடல்களை பாடினர். ருமானி, ஒட்டு, மல்கோவா, நீலம், பங்கனப்பள்ளி போன்ற பல்வேறு மாம்பழ வகைகளாக பள்ளிக்குழந்தைகள் அலங்கரிக்கப்பட் டிருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ- மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.