வேதாரண்யம், அக்.28 - கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன் னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்றம் சார்பில் ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சட்டமன்ற தலைமை கொறடா கோவி.செழியன் தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்புரையாற்றி னார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி உரை யாற்றினார். பேச்சுப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.