சென்னை,ஜூலை 31 - ராமநாதபுரம் நடு நிலைப் பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று 4வது வார்டு சிபிஎம் உறுப்பினர் ஆர்.ஜெயராமன் கோரி னார். பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் செவ்வாயன்று (ஜூலை 30) ரிப்பன் மாளி கையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பேசிய ஜெயராமன், 4வது வார்டில் உள்ள ராம நாதபுரம் சென்னை நடு நிலைப்பள்ளி, தமிழ் நாட்டி லேயே சிறந்த பள்ளி மேலா ண்மைக்குழு என்ற விருதை பெற்றுள்ளது. அந்தப் பள்ளி யின் தலைமை ஆசிரியர் மாநிலத்தில் சிறந்த 10 தலைமை ஆசிரியர்களில் ஒருவராக தேர்வு செய்யப் பட்டு கவுரவிக்கப் பட்டுள்ளார். இந்தப் பள்ளியில் சுமார் 500 மாணவர்கள் படிக்கிறார்கள். இப்பள்ளி யில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடப் பிரிவுகளுக்கும் ஆசிரி யர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே அப்பள்ளிக்கு தரமான ஆசி ரியர்களை நிய மனம் செய்யப்படுவார்களா? மாநகராட்சி நியமிக்கும் வரை பள்ளி மேலாண்மை குழு மூலமாவது ஆசி ரியர்களை நியமிக்க நட வடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மேயர், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங் கள் ஆகஸ்ட் மாதம் நிரப்பப் படும். இதில் காலதாமதம் ஏற்பட்டால்,பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்க ஆவன செய்யப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் 50 ஆசிரியர்கள் நிய மிக்கவும், அதில், 4வது வார்டு எர்ணாவூர் உயர்நிலைப்பள்ளி, ராம நாதபுரம் நடுநிலை பள்ளிக்கு தலா 5 ஆசிரியர் களை நியமிப்பது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதனை யடுத்து மேயருக்கு ஆர்.ஜெயராமன் நன்றி தெரி வித்தார்.