பாபநாசம் அருகே அய்யம்பேட்டையை அடுத்த கண்டியூர் மெயின் சாலையில் நெடுஞ்சாலைத் துறை வைத்துள்ள பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால், புதிதாக இந்த சாலையில் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் தடுமாறுகின்றனர். இதே போன்று கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையிலும் சில பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டிகளை அப்புறப்படுத்துவதுடன், சுவரொட்டி ஒட்டாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.