districts

ஜெயங்கொண்டம் அருகே பெண் குழந்தையை புதைத்துக் கொன்ற தாய் - பாட்டி கைது

அரியலூர், மே 2- ஜெயங்கொண்டம் அருகே  பிறந்து 30 நாளேயான பச்சிளம் குழந்தையை கொலை செய்துவிட்டு மாயமானதாக நாடகமாடிய குழந்தையின் தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர்  அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரை சோழன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா(48) என்ற மனைவியும்  ஒன்பது பிள்ளைகளும் உள்ளனர்.  இவர்களது மூத்த மகள் மஞ்சுளா (18) திருமணமாகாமல் கர்ப்பமாக இருந்த தாக கூறப்படுகிறது. இதற்கு காரணமான மஞ்சுளா கூறிய மாற்று சமூகத்தை  சேர்ந்த அன்புதுரை மீது  ஜெயங்கொண் டம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அன்புதுரையை கைது செய்து  சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 29  ஆம் தேதி மஞ்சுளாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த செய்தி அறிந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் அண்மையில் அங்க  அடையாளங்கள் பதிவு செய்து சென்ற தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  இரவு  10 மணியளவில் தாய் மஞ்சுளாவுடன் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டார்கள் என  மீன்சுருட்டி காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க மஞ்சுளா புகார் அளித் தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர மாக தேடி வந்தனர்   இந்நிலையில் மஞ்சுளா வீட்டிற்கு அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் கருவேல மரக்கிளைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அப்பகுதியில் சோ தனை செய்தபோது பச்சிளம் குழந்தை புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது பச்சிளம் குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர் மேலும் இது குறித்து சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாயார் மஞ்சுளா, பாட்டி பரிமளா, மஞ்சுளாவின் சகோதரர் கள் உள்ளிட்ட ஐந்து பேரிடம் மீன்சுருட்டி போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.  போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை தானே கொலை செய்த தாக மஞ்சுளா ஒப்புக்கொண்டார் .மேலும் தகாத உறவால் குழந்தையை பெற்றுக் கொண்ட தன்னை தனது குடும்பத்தினர் அடிக்கடி  திட்டியதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் குழந்தை யை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு செத்துவிடலாம் என நினைத்ததாக தெரிவித்துள்ளார் மேலும் இதற்கு உடந்தையாக இருந்த மஞ்சுளாவின் தாயார் பரிமளாவையும் போலீசார் கைது செய்தனர் மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் குழந்தையை கொலை செய்வதற்கான வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.