districts

சிறுபான்மை ஏழை கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி

மயிலாடுதுறை, நவ.10- மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறு பான்மையினர் பொருளா தார மேம்பாட்டுக்கழகம் (TAMCO) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டம் 1- ன் கீழ்  (விராசத் கடன் உதவிதிட்டம் - 1) சிறுபான்  மையினத்தைச் சேர்ந்த ஏழை கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தகவலளித்துள் ளார். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொரு ளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டம் 1 - ன் கீழ் (விராசத் கடன் உதவிதிட்டம் - 1)  சிறுபான்மையினரான முஸ்லீம், கிறிஸ்த வர், சீக்கியர், புத்த மதத்தவர், பார்சீயர்,  ஜைனர் ஆகியோரில் ஒருவராக இருக்கும் ஏழை கைவினை கலைஞர்களுக்கு கடனு தவி வழங்கும் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விரும்பும் சிறுபான்மையின கை வினை கலைஞர்கள் 18 வயது நிறைவ டைந்தவராக இருக்க வேண்டும்.  ஆண்டு வருமானம் அதிகபட்சமாக கிரா மப்புறத்தில் ரூ.98,000, நகர்ப்புறத்தில் ரூ.1,20,000 வரை இருக்கவேண்டும். இத்  திட்டத்தின் கீழ் தனிநபருக்கு அதிகபட்ச மாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப் படும்.  மேலும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும், பெண் பயனாளி களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்திலும் கட னுதவி வழங்கப்படும்.  

மேலும் தேசிய சிறுபான்மையினர் மேம்  பாட்டு கழகம் (NMDFC) மூலம் கடன்  திட்டம்-2 கீழ் (விராசத் கடன் உதவி திட்டம் -2) சிறுபான்மையினத்தைச் சேர்ந்த  கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் கடன் உதவி  பெற விரும்பும் கைவினை கலைஞர்களின் ஆண்டு வருமானம் அதிகபட்சமாக ரூ.8  லட்சம் வரை உள்ள பயனாளிகள், அதிக பட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்  கப்படும்.  மேலும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் ஆண் பயனாளிகளுக்கு 6 சத வீதம் வட்டி விகிதத்திலும் பெண் பயனாளி களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் வழங்கப்படும் திட்டம்-1 -மற்றும் திட்டம் 2 ஆகிய கடன்கள் திருப்பி செலுத்த கால  அவகாசம் 5 ஆண்டுகளாகும்.  டாம்கோ கழகத்தின் மூலம் செயல் படுத்தப்படும் இத்திட்டத்தின் படி சிறு பான்மையினத்தைச் சேர்ந்த ஏழை கை வினை கலைஞர்கள் விண்ணப்பிக்க மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்  பங்கள் சமர்ப்பித்து கடன் பெற்றுப் பயன டையுமாறு   மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளார்.