districts

img

புதிய இந்தியாவை யாராவது பார்த்தீர்களா?

அரியலூர், மார்ச் 31 - பிரதமர் மோடி புதிய இந்தியா பிறக்கும் என்றார். ஆனால், யாராவது  புதிய இந்தியாவை பார்த்தீர்களா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது கேள்வி எழுப்பி னார். சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு கோரி, அரியலூர் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குச் சேக ரித்தார். அப்போது அவர் பேசுகையில், “பானை சின்னம் உலகப் புகழ்பெற்ற  சின்னமாகியுள்ளது. இந்த சின்னம்  எல்லோருக்கும் தெரிந்த சின்னமாக  உள்ளது. வேட்பாளர் திருமாவள வனை 3 லட்சம் வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.  கொரோனா காலத்தில் பிரதமர் மக்களுக்கு உதவாமல், வீட்டிற்கு வெளியே விளக்கு ஏற்றுங்கள். கை தட்டுங்கள் என்றார். இந்தியா கூட்டணி யின் தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டது போல, எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். மோடி சமையல் எரி வாயு விலையை ரூ.800 உயர்த்தி விட்டு, 100 ரூபாயை குறைத்துள்ளார்.  10 ஆண்டுகள் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டிற்கு வராதவர், கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார். தமிழ்நாட்டில் பாஜக டெபாசிட்கூட வாங்காது. மோடி, கருப்புப் பணத்தை ஒழிப் பேன்; கருப்புப் பணத்தை மீட்டு அனை வருக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்ப டும் என்றார். ஆனால் 15 பைசாகூட கொடுக்கவில்லை. தமிழ்நாட்டின் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பின் போது, ஒன்றிய அரசு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை.  நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 22 மாணவர்கள் பலியாகினர். இதற்கு பாஜகவும், அதற்கு துணையாக இருந்த அதிமுகவும் பதில் சொல்ல வேண்டும். பிரதமர் மோடி, புதிய இந்தியா பிறக்கும் என்றார். யாரா வது புதிய இந்தியாவை பார்த்தீர் களா?” என்றார்.  காட்டுமன்னார்குடி எம்எல்ஏ  சிந்தனைச்செல்வன், ஜெயங்கொண் டம் எம்எல்ஏ க.சொ.க கண்ணன்,  விசிக மாவட்டச் செயலாளர்கள் கதிர் வளவன், தேர்தல் மேலிட பொறுப்பா ளர்கள் விடுதலைச்செழியன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி  பொறுப்பாளர் இலக்கியதாசன், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும்  கூட்டணி கட்சியினர் கலந்து  கொண்டனர்.