திருச்சிராப்பள்ளி, டிச.14 - திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக திருச்சி மாநகரின் முக்கிய வீதிகளில், சில பகுதி களில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக கிராப்பட்டி அன்புநகர், அருணாச்சலம் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சக்தி விநாயகர் கோயில் தெரு, டி.எஸ்.நகர், உறையூர், லிங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்றும் நட வடிக்கைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு அலு வலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்ப ழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகர பொறியாளர் சிவபாதம், மாநகராட்சி அலுவலர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.