தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை தனியார்மயமாக்கும் வகையில் பிரிப்பதைக் கண்டித்து சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் வியாழனன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் வாயிற் கூட்டம் நடைபெற்றது. திட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் உரையாற்றினார்.