districts

மயிலாடுதுறை மக்களின் போராட்டம் வெற்றி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது

மயிலாடுதுறை, டிச.7 - மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீ னத்திற்கு சொந்தமான இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு முன்பு  வாங்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சி யில் போதிய நிதி இல்லாததால், புதிய பேருந்து நிலையம் கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம்  அமைப்பதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதி கள் திட்டம் 2021 - 2022-ன்கீழ் தமிழக அரசு ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததையடுத்து, புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு நக ராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர்  செல்வராஜ் தலைமையில் அண்மையில் அவசரக் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறப் பட்டது.  இதையடுத்து, புதிய பேருந்து நிலையத் துக்கான அடிக்கல் நாட்டு விழா புதனன்று நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன், நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி  ஆணையர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தனர். இதில் தருமபுர ஆதீனம், ஒருங்கி ணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால  போராட்டங்களுக்கு பிறகு, புதிய பேருந்து  நிலையம் அமைப்பதற்கான பணி துவங்கிய தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.