districts

சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

மயிலாடுதுறை, ஏப்.28 - 2024 மக்களவை பொதுத் தேர்தல்  முடிவடைந்துள்ள நிலையில், மயிலாடு துறை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும்  சட்டமன்ற தொகுதிவாரியாக பாதுகாப்பு டன் வைக்கப்பட்டுள்ளன.  மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் மற்றும் பாபநாசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மன்னம்பந்தல் ஏ.வி.சி.  பொறியியல் கல்லூரியிலும், கும்பகோ ணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய  சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும்  ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி யிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாது காப்பாக வைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், மூன்றடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கு பாது காப்பில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு  படையினர் ஆயுதம் ஏந்திய நிலையில் சுழற்சி முறையிலும், இரண்டாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு சிறப்பு  படை காவலர்கள் ஆயுதம் ஏந்திய நிலை யில் சுழற்சி முறையிலும், மூன்றாவது அடுக்கு பாதுகாப்பில் மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவல் துறை ஆய்வாளர்கள் மற்றும் காவ லர்கள் சுழற்சி முறையிலும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.  இது தவிர வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகம் முழு வதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டு உள்ளன. இவை அனைத்தும்  கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப் பட்டு வருகிறது. இதற்காக வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கண்காணிப்பு பணிகளை வேட்பா ளர்கள் மற்றும் அவர்களது சார்பில் முக வர்கள் கண்காணிப்பதற்கான அனுமதி  வழங்கப்பட்டு கண்காணித்து வருகின்ற னர். மேலும், தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டும், 24 மணிநேரமும் தீய ணைப்பு வண்டிகளும், தீயணைப்பு வீரர் களும் தயார் நிலையில் உள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில்  வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் முழு மைக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கு வதற்கு விரிவான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.  மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள ஏ.வி.சி.  கல்லூரி வளாகம் மற்றும் அதனை சுற்றி  உள்ள பகுதிகள், மன்னம்பந்தல் கிராமம்,  ஆறுபாதி கிராமங்களில் ட்ரோன்கள் உள்ளிட்ட வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்றவை பறக்க  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  காவல்துறையினரால் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருகிறது என மயிலாடு துறை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல்  நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி யர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.