districts

img

மே தின கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

தஞ்சாவூர்/நாகப்பட்டினம்/கரூர், மே 3-  தஞ்சாவூரில் சிஐடியு மாவட்டக் குழு சார்பில் மே தின தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், மே தினப் பேரணி - பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வெ.சேவையா ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், ஏஐடியுசி நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் மு.அ.பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் து.கோவிந்தராஜூ, சிபிஎம் தஞ்சை மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ரெங்கசாமி, ஏஐடியுசி துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழக தஞ்சை பணிமனையில் இருந்து பேரணி துவங்கி, பனகல் கட்டிடம் அருகே நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.  நாகப்பட்டினம் மே தினத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டக் குழு அலுவலகத்தில் செங்கொடியினை கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து ஏற்றி வைத்தார். நாகை நகரச் செயலாளர் க.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கீழ்வேளூர் வட்டம் 75 அனக்குடி ஊராட்சியில் செங்கொடியினை சிபிஎம் சட்டமன்றக் குழு தலைவரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி ஏற்றி வைத்தார். கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபுபக்கர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  தலைஞாயிறு கடைத்தெருவில் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மே தின கொடியேற்றப்பட்டது. செங்கொடியினை சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து ஏற்றி வைத்து உரையாற்றினார். சிபிஎம் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   கரூர் உலகத் தொழிலாளர்கள் தினமான மே தினத்தில் சிஐடியு, ஏஐடியுசி சங்கங்களின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மாபெரும் உழைப்பாளர் தின பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகிலிருந்து ஜவகர் பஜார், பழைய திண்டுக்கல் சாலை, லைட் ஹவுஸ் கார்னர் வழியாக உழவர் சந்தையில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் உழைப்பாளர் தின பேரணி நிறைவடைந்தது. பொதுக்கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன், ஏஐஎஸ்எப் மாநிலச் செயலாளர் பா.தினேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் மோகன்குமார், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன், மாவட்ட துணைச் செயலாளர் கே.கலாராணி ஆகியோர் கூட்டத்தில் பேசினர்.  சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிபிஎம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

மே தினத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் திருப்பூண்டி ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கும், பேருந்து பயணிகள், வேளாங்கண்ணி பேராலயத்திற்கு செல்லும் பாதசாரிகள், வியாபாரத்திற்கு செல்லும் வர்த்தகர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வாகன ஓட்டுநர்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் திருப்பூண்டி மூலக்கடையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தர்ப்பூசணி பழம், நீர் மோர், குளிர் பானங்கள், மினரல் வாட்டர் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. கீழையூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல் அஜீஸ், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மு.ப.ஞானசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அன்புராஜ், உமாநாத், உள்ளிட்டோர் குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.