districts

img

விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கம் போராட்டம்

புதுக்கோட்டை, நவ.4-  அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்வைக் கண்டித்தும், மோடி தலை மையிலான ஒன்றிய அரசு  விலையைக் குறைக்க நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி யும் புதுக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற இந்தப் போராட் டத்தில் தண்ணீரில் பலகாரம்  சுடுவதைப் போல பாவனை  காட்டி இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டத்  தலைவர் எ.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் பி.சுசிலா, துணைத் தலைவர் டி. சலோமி, பொருளாளர் ஜெ. வைகைராணி, துணைத் தலைவர் ஆர்.கவிதா  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.