districts

img

குழந்தைகளை பாதுகாப்போம்: மாதர் சங்கம் விழிப்புணர்வு இயக்கம்

திருவாரூர், ஜுன் 18 - குழந்தைகள் மீதான வன்முறைகளை தட்டிக் கேட்போம்; தடுத்து நிறுத்துவோம் என்ற முழக்கத்துடன் மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு இயக்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக ஜுன் 17  முதல் ஜுன் 22 வரை நடைபெறுகிறது. இதனொரு பகுதியாக, மாதர் சங்கத்தின்  திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக மாவட்டம்  முழுவதும் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஞாயிறன்று துவங்கி நடைபெற்று வருகிறது.  திருவாரூர் நகரப் பகுதியில் ஒன்றியத் தலைவர் திரிபுரா தலைமையில் நடைபெற் றது. மாவட்டச் செயலாளர் பி.கோமதி பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசுரத்தை வழங்கி னார். திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியத் தில் விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர்  ஜி.கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.பவானி பொதுமக்க ளிடம் துண்டுப் பிரசுரம் வழங்கினார். இதில் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.