districts

திருச்சி முக்கிய செய்திகள்

வளர்ச்சி திட்டப்  பணிகள் ஆய்வு

பாபநாசம், மார்ச் 8 - தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த  ஊராட்சி மன்றத் தலை வர்கள் கோவிந்த நாட்டுச் சேரி ஜெய்சங்கர், பெரு மாள் கோயில் ராஜேந் திரன் உள்ளிட்ட 6 பேர் பட்டறிவு பயிற்சிக்காக ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட் டங்களில் உள்ள ஊராட்சி களில்  வளர்ச்சித் திட்டங் களை 3 நாட்கள் பார்வை யிட்டனர். கோவை மாவட்டம் ஓடந்துறையில் தொ குப்பு வீடுகள், காற்றாலை  மூலம் மின்சாரம் தயா ரிப்பது, ஈரோடு மாவட் டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 22  ஊராட்சிகளுக்கு பவானி ஆற்றிலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் தண்ணீர் கொண்டு செல்வது, ஊட்டியில் சாக்லேட், டீ தூள், கேரட்  பேக்டரி, காளான் உற் பத்தி மையம், தாவரவி யல் பூங்கா உள்ளிட்ட வற்றை பார்வையிட்டனர்.

வேளாண் பணி அனுபவத் திட்ட துவக்க விழா

தஞ்சாவூர், மார்ச் 8 - புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவர்க ளின் கிராம வேளாண் பணி அனுபவத் திட்ட துவக்க விழா, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செருவா விடுதியில் நடைபெற்றது.  விழாவிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்க.ராமஜெயம் (செருவாவிடுதி தெற்கு),  டி.விஜயராமன் (செரு வாவிடுதி வடக்கு) ஆகி யோர் தலைமை வகித்த னர். பேராவூரணி வேளாண் உதவி இயக்கு நர் (பொ) எஸ்.ராணி சிறப்புரையாற்றினார். இத்திட்டத்தின் நோக்கம் குறித்தும், மாணவர்கள் செய்யவிருக்கும் செயல் விளக்கம், வேளாண் பயிற்சிகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.  வேளாண் உதவி அலுவலர்கள், புஷ்கரம்  வேளாண்மை அறிவி யல் கல்லூரி பேராசிரி யர்கள் மற்றும் விவசாயி கள் கலந்து கொண்டனர்.

இராசராச சோழன்  பன்னோக்குக் கூடம் திறப்பு 

தஞ்சாவூர், மார்ச் 8-  தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக வளா கத்தில் ஒருங்கிணைந்த உயர்கல்வி வளர்ச்சித் திட்டம் (ரூசா) நிதி நல் கையின்கீழ் கட்டப்பட்ட, மாமன்னன் இராசராச சோழன் பன்னோக்குக் கூடம், உள்விளையாட்டு அரங்கம், கூடுதல் மகளிர் விடுதி, பழைய ஆட வர் விடுதி முதல் தளம், யோகா அரங்கம், குற ளோவியம், தமிழ் வளர் மைய ஒலி-ஒளிப் பதிவுக் கூடம் (தமிழ்நாடு அரசு நிதி நல்கை) ஆகிய புதிய கட்டிடங்கள் திறக்கப் பட்டன. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் காணொலிக் காட்சி வாயிலாக, உலகத்  தமிழ் ஆராய்ச்சி நிறு வனத்திலிருந்து திறந்து வைத்தார். இந்நிகழ்வில், முனை வர் சி.தியாகராஜன், கலைப்புல முதன்மையர்  முனைவர் பெ.இளையாப் பிள்ளை, சுவடிப்புல முதன்மையர் த.கண் ணன், நிதியலுவலர் ம. கிருஷ்ணமூர்த்தி, மக்கள்  தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு. முருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மார்ச் 21 ஆழித் தேரோட்டம்: ஒருங்கிணைப்பு கூட்டம்

திருவாரூர், மார்ச் 8 - திருவாரூர் மாவட்ட ஆட்சிய ரக அலுவலக கூட்டரங்கில் தியாக ராஜ சுவாமி திருக்கோயில் ஆழித் தேர் விழா-2024-வை ஒட்டி, அலுவ லர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ  தலைமையில், திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது.  திருவாரூர் தியாகராஜ சுவாமி  திருக்கோயில் ஆழித்தேரோட்ட மானது மார்ச் 21 அன்று நடைபெற வுள்ளது.  இந்த தேரோட்டத்தினை யொட்டி துறை வாரியாக பணி கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. தேர்விழா நாளுக்கு மூன்று நாட்கள் முன்பும், மூன்று நாட்கள் பின்பும் திருவாரூர் மாவட்ட மருத்துவமனையில் பகல், இரவு முழுவதும் கூடுத லாக மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிய ஏற்பாடு செய்து தரு வது. மாவட்டத்தின் பல்வேறு பகுதி யில் இருந்து பொதுமக்கள் தேர்  திருவிழாவில் கலந்து கொண்டு  எளிதாக திரும்பிச் செல்லும் வகை யில், அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்து வசதி செய்து தரு வது மற்றும் காவல்துறை, தீய ணைப்புத் துறை, சுகாதாரத் துறை  உள்ளிட்ட அனைத்து துறைகளுக் கான பணிகளும் கலந்து ஆலோசிக் கப்பட்டன. இந்தக் கோவில் ஆழித்தே ரோட்டத்தை சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகளை அனைத்து   துறை அலுவலர்களும் மேற் கொள்ள வேண்டும் என மாவட்ட  ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.  கூட்டத்தில், மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக் குமார் மாவட்ட வருவாய் அலுவ லர் கு.சண்முகநாதன், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.திலகம், உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ராமு.ஸ்ரீதர், செயல் அலுவலர் அழகியமணவாளன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.

போலி பத்திரங்களைக் கொடுத்து ஏமாற்றியவருக்கு 2 ஆண்டு சிறை

புதுக்கோட்டை, மார்ச் 8- அரசு ஒப்பந்தங்களை பெற போலியாக வங்கி உத்தரவாதப் பத்தி ரங்களைக் கொடுத்து ஏமாற்றியவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுனாமி மறுவாழ்வு பணிகளுக்கு விடப்பட்ட ஒப்பந்தங்களில் அரசு  ஒப்பந்தங்களை பெற போலியாக வங்கி உத்தரவாத பத்திரங்களை கொடுத்து அரசை ஏமாற்றியதாக, சுனாமி மறுவாழ்வு திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவில் 5 சட்டப் பிரிவுகளில் புகார் அளித்தார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி புலன் விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிந்து கடந்த 8.3.2010 ஆம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவு பெற்ற  நிலையில், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஜெயந்தி வியாழக் கிழமை தீர்ப்பு கூறினார்.  இதில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பாரதியார் தெரு வைச் சேர்ந்த ரங்கநாதன் மற்றும் எம்.கே.எல் குடியிருப்பை சேர்ந்த தன சேகரன் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபரா தமும் விதிக்கப்பட்டது.  அதேபோல, அறந்தாங்கி எழில் நகரைச் சேர்ந்த சேதுராமன் என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும், மற்றொரு பிரிவில் சேதுராமனுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்ட னையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனை களை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

உணவகத்தில் சிலிண்டர்  வெடித்து தீ விபத்து

திருவாரூர், மார்ச் 8 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மூலங்குடியில் உள்ள உணவகத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உணவகம் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும், அருகில் இருந்த இரண்டு கீற்று கொட்ட கைகளும் தீ விபத்தில் எரிந்து நாசமாயின. குடவாசல் அருகே மூலங்குடி மெயின்ரோட்டில் செல்வகுமார் என்பவரது மனைவி பூங்கொடி தனது குடிசை வீட்டில் உணவகம் நடத்தி வருகிறார். வியாழக்கிழமை உணவகத்தில் அவர் வாடிக்கையாளர் களுக்கு உணவு தயாரித்து கொண்டிருந்த போது, அங்கிருந்த எரி வாயு சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது. சிலிண்டர் வெடித்த இடத்தில்  யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் உண வகம் முற்றிலுமாக தீயில் கருகி நாசமானது. இந்த தீ விபத்தின்போது எதிரே இருந்த அன்பழகன் மாடி வீட்டின்  முன்பக்கம் இருந்த கீற்றுக் கொட்டகை, அதேபோன்று உணவகத்தின் அருகில் மாடி வீட்டின் மேற்புறம் இருந்த கீற்றுக் கொட்டகை மீது தீ  பொறி விழுந்ததில் அவை முழுவதுமாக எரிந்து சேதமாயின.  தகவலறிந்த குடவாசல் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குட வாசல் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

எள் பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள்

தஞ்சாவூர், மார்ச்.8 -  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நடப்பு பட்டத்தில்  பரவலாக எள் பயிரிடப்படுகிறது. இப்பயிருக்கு அதிக  நீரும் தேவை யில்லை. அதுபோலவே இப்பயிருக்கு அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடிய சக்தியும் உண்டு. எனவே சரியான பயிர் பராமரிப்பு தொழில்நுட்பங்களை தவ றாமல் கையாண்டால் எள் பயிர் சாகுபடியில் நல்ல விளைச்சலை பெற முடியும் என பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) இ.அப்சரா விவசாயிகளுக்கு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:  மாசிப் பட்டத்தில் VRI 2, 3, TMV 7 போன்ற ரகங்கள் உகந்தவை.  விதை அளவு மற்றும் பயிர் எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஏக்க ருக்கு இரண்டு கிலோ எள் விதையை மணலுடன் கலந்து சீராக தூவி  விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 1.5 கிலோ விதையை வரிசை பயிராக  விதைக்க வேண்டும். இடைவெளி 30x30 சென்டிமீட்டர் அளவில் இருக்க வேண்டும். பயிர் எண்ணிக்கை ஒரு சதுர மீட்டருக்கு 11 செடிகள்  இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.  நோய்களை கட்டுப்படுத்த பூஞ்சாண விதை நேர்த்தி கார்பண்ட சிம் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதமும், டிரைக்கோடெர்மா ஒரு  கிலோ விதைக்கு 4 கிராம் வீதமும், தலா ஒரு பாக்கெட் அசோஸ்பை ரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ விதைக்கு என்ற அளவில்  கலந்து விதைக்க வேண்டும். நுண் ஊட்டச்சத்துக்களான மாங்கனீஸ்  சல்ஃபேட் ஏக்கருக்கு 2 கிலோ மற்றும் ஜிங்க் சல்பேட் 10 கிலோ என்ற  அளவில் 20 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும்.  மண்ணில் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை அதிகரிக்கவும் கடைசி உழவின் போது மக்கிய தொழு உரத்தை ஏக்கருக்கு 5 டன் என்ற  அளவில் இட வேண்டும்.மேலும் யூரியா 20 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 30  கிலோ, பொட்டாஷ் 10 கிலோ போன்ற உரங்கள் பயிருக்கு அளிக்கப் பட வேண்டும்.  நாய்க்கடுகு, சாரணை, பண்ணை பூண்டு போன்ற செடிகள் சாகு படி செய்யும் நிலத்தில் பெரிதளவில் முளைத்துக் காணப்படும்.இவ்வகை களைகளை எள் விதைத்த 40 நாட்கள் வரை கட்டுப்படுத்தி னாலே பயிரின் விளைச்சல் அதிகரிக்கும். எள் விதைத்த 25 ஆவது  நாள் மண்ணின் ஈரம் இருக்கும் தருணத்தில் 500 மில்லி லிட்டர் ஏக்கரு க்கு என்ற விகிதத்தில் மண்ணில் கலந்து இட்டாலோ அல்லது கைத் தெளிப்பான் கொண்டு தெளித்தாலோ களைகளை பெரிதளவு கட்டுப் படுத்த முடியும். பயிர் களைத்தல் என்பது எள் சாகுபடியில் ஒரு முக்கியமான பரா மரிப்பு தொழில் நுணுக்கமாகும். விதைத்த 15 நாட்கள் கழித்து செடிக்குச்  செடி 15 சென்டிமீட்டர் இடைவெளி இருக்கும்படியும் பின் 10 நாட்கள்  கழித்து வரிசைக்கு வரிசை 30 சென்டிமீட்டர் இடைவெளி இருக்கும்படி  பயிர்களை களைத்துவிட வேண்டும். எள்ளிற்கு குறைந்த நீர் பாசனம்  போதுமானது.எள் பயிருக்கு இரண்டு தண்ணீரே போதுமானது. எள் செடி முளைத்து ஐந்து இலை விடும்பொழுது ஒரு நீர் பாய்ச்சுவதும் பிறகு பூவும் காயும் தோன்றும் போது, ஒரு நீரும் பாய்ச்ச‌ வேண்டும். எள் ளிற்கு மண்ணின் தன்மையை அறிந்து கொண்டு குறைந்த நீர் பாச னம் செய்வதே சிறந்தது.  பயிர் ஊக்கிகளின் பற்றாக்குறையினால் பூ பூக்காமை குறையை  நிவர்த்தி செய்ய எள் விதைத்த 40 ஆம் நாள் பிளானோபிக்ஸ் 150 மில்லி  ஏக்கருக்கு மற்றும் டிஏபி 1 சதவீத கரைசலையும் சேர்த்து மாலை வேளை யில் தெளிக்க வேண்டும். எள் பயிரை தக்க காலத்தில் அறுவடை செய்ய வேண்டும்.  தண்டின் அடிப்பாகத்தில் இலைகள் உதிர்ந்து காணப்படும். தண்டின் மேல் பாகத்தில் இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும்.  தண்டின் மத்திய பாகம் வரை காய்கள் மஞ்சள் நிறமாக காணப்ப டும். தண்டின் கீழ் பாகத்தில் இருந்து 10 வது காயை உடைத்து பார்த்தால் நிறம் மாற்றம் காணப்படும். செடிகளை அடியோடு அறுத்து பிறகு செடிகளை வட்டமாக ஒன்றின் மீது ஒன்றாக தண்டு வெளியில் தெரி யும்படி அடுக்க வேண்டும்.பிறகு வைக்கோல் கொண்டு மூடி விட வேண்டும். அதன்பின் ஐந்தாம் நாள் செடிகளை வெயிலில் காய வைத்து உலுக்கி எள்ளினை பிரித்தெடுக்க வேண்டும். எனவே எள் சாகுபடி விவ சாயிகள் மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளை கையாண்டு அதிக மகசூல் பெறலாம்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம் பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த ராஜ கிரியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. காசிமியா  ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம், ராஜகிரி, பண்டார வாடை அனைத்து வணிகர் சங்கம், தஞ்சாவூர் ஸ்ரீ வாரி பார்மஸி  அண்ட் கிளினிக் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இலவச  ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாமில்  100-க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை மேற் கொண்டனர்.

பகுதிநேர நியாய விலைக் கடை வேண்டும் கூப்புளிக்காடு கிராம மக்கள் போராட்டம்

தஞ்சாவூர், மார்ச் 8- பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட 16 ஆவது வார்டு கிராமத்தில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகுதி நேர நியாயவிலைக் கடை அமைத்து தர வேண்டும். சுடுகாட்டுக்கு சாலை வசதி செய்து தர வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆவணம் சாலை முக்கத்தில் பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட 16 ஆவது வார்டு கூப்புளிக்காடு கிராமத்தில் 204-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருப்பதாகவும், இப்பகுதி மக்கள் அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆதனூர் நியாய விலைக் கடைக்கு சென்று தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில், தங்கள் பகுதியிலேயே பகுதிநேர அங்காடி அமைத்து தர வேண்டும். சுடுகாட்டுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி, வட்ட வழங்கல் துறை, வருவாய்த் துறை என பல தரப்பினரிடம் கோரிக்கை மனு அளித்தும், இதுவரை பகுதிநேர நியாய விலைக் கடை, சாலை வசதி செய்து தரப்படவில்லை.  இதனால் வெள்ளியன்று அப்பகுதி பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த, வட்டாட்சியர் தெய்வானை, வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், வர்த்தக கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர், அரசு அலுவலர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பேச்சுவார்த்தையில், இரண்டு தினங்களுக்குள் பகுதிநேர அங்காடி அமைத்து தரப்படும். விரைவில் சுடுகாட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.