இந்தியா கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, வணிகவரி-பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மேலூர் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் வாக்குச் சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் மேலூர் சட்டமன்றத் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் வ.து.ந.ஆனந்த், திமுக ஒன்றிய செயலாளர்கள் ராஜராஜன், பழனி, ராஜேந்திரபாபு மற்றும் கூட்டணிக்கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.