districts

img

வாலிபர் சங்க கபடி போட்டி: மதுரை துணைமேயர் பரிசு வழங்கினார்

கரூர், ஜன.3 - கரூரில் வாலிபர் சங்கம் நடத்திய கபடி போட்டி சிபிஎம் மதுரை துணை மேயர் டி.நாகராஜன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார். கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், மாவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட டி.ரெட்டியபட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை சார்பில் 23 ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபடி போட்டி 2 நாட்கள் நடைபெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு கபடி போட்டியை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சக்திவேல், பி.ராமமூர்த்தி, கடவூர் வட்டச் செயலாளர் பி.பழனிவேல், மாவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் கீதா செந்தில்மோகன், துணைத் தலைவர் பிரபாகுமார், விவசாய சங்கம் பி.ரவிக்கண்ணன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.    இப்போட்டியில் திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கபடி வீரர்கள் விளையாடினர். பரிசளிப்பு விழா கரூர் மாவட்டம் குௗக்காரம்பட்டியைச் சேர்ந்த பாரதி இளைஞர் நற்பணி மன்றம் முதல் பரிசையும், திண்டுக்கல் மாவட்டம், காச்சகாரன்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் பிரதர்ஸ் அணி 2 ஆம் பரிசையும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டி.டி.கே ஸ்போர்ட்ஸ் கிளப் 3வது பரிசையும், கரூரை சேர்ந்த ஜூனியர் ஸ்போர்ட்ஸ் அணி 4வது பரிசையும் பெற்றன. கட்சியின் மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜ், வாலிபர் சங்க மாநில முன்னாள் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெற்றி பெற்ற கபடி அணிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.