மதுரை, மே 5- தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலுடன் வெப்ப அலையும் வீசுவதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். வெயிலில் நடந்து செல்பவர்கள் மயங்கி கீழே விழுகின்றனர். உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இந் நிலையில் மக்களின் தாகம் தீர்க்க, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல், நீர்மோர் பந்தல் அமைக்கப்பட் டும் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க அரசு சார்பில் ஒஎஸ்டி கரைசல் ஆகியவை பொதுமக் களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் திலகர்திடல் போக்குவரத்து சிக்னல் அருகில் கோடை வெயிலில் இருந்து மக்களை காக்க பச்சை நிற திரைச்சீலையால் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. இதனை பொதுமக்களும் பல் வேறு அமைப்பினரும் பாராட்டுகின்றனர். இதேபோல் நகரில் அதிகம் மக்கள் கூடும் இடங்களான கோரிப்பாளையம், அர சரடி, குரு தியேட்டர்,பெரியார் பேருந்து நிலையம், காளவாசல், கீழவாசல், சிம்மக் கல், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கூரை அமைத்து, குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர். சிக்னல்களில் நிழற்கூரை அமைத்த மதுரை மாநகராட்சி சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தை சமாளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் போக்குவரத்து சிக்னல்களில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சிக் குட்பட்ட சிம்மக்கல் நோக்கி செல்லக் கூடிய பகுதியில் மாநகராட்சி ஆணையாள ரின் உத்தரவின்படி உதவி பொறியாளர் முன்னிலையில் சிக்னல் பகுதியில் வாகன ஓட்டிகளுக்காக தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டது மாநகராட்சியின் இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.