districts

img

ஆன்லைன் அபராதத்தில் விதிமுறை மீறல்

மதுரை, பிப்.9-  மதுரை நகர் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க ஆண்டு பேரவை ஞாயிறன்று கே.கே.நகர்  வி.ஆர்.கிருஷ்ணய்யர் கம்யூ னிட்டி ஹாலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இரா.தெய்வ ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் எம்.முனீஸ்வ ரன் மாநாட்டு கொடியை ஏற்றி  வைத்தார். ஏ.கண்ணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். எம்.தமிழ்செல்வன் வரவேற்று பேசி னார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் என். கனகவேல், பொருளாளர் கே.அறி வழகன் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர்.  சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின் வாழ்த்தி பேசினார். மாநில பொதுச்செயலாளர் எம்.சிவாஜி நிறைவுரையாற்றினார். தலைவராக இரா.தெய்வராஜ், பொதுச்செயலாளராக கே.அறிவழ கன், பொருளாளராக என்.கனக வேல் உள்ளிட்டு 18 பேர் கொண்ட  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். நகரில் குண்டும், குழியுமான சாலைகளை மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும். ஆன்லைன் அபராதம்  விதிப்பதில் பல்வேறு முறைகேடு களும், விதிமுறைகளும் மீறப்படு கின்றன. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோ ரிக்சாக்கள் மற்றும் முழுமையான சான்றிதழ் உள்ள ஆட்டோக்களையும் புகைப்படம் எடுத்து ஆன்லைன் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் ஆட்டோ ரிக்சாக்களுக்கு எப்சி மற்றும் இதர பணிகளுக்கு ஆர்டிஓ  அலுவலகம் செல்லும் போதுதான்  இதுபோன்ற அபராதம் விதிக்கப் பட்டது தெரிய வருகிறது. எனவே  இதனை உடனடியாக கைவிட  வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.