districts

திருச்சி முக்கிய செய்திகள்

தஞ்சையில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பணியாற்றுவோம்! சிபிஎம் தீர்மானம்

தஞ்சாவூர், மார்ச் 23-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தஞ்சை  சட்டமன்ற தொகுதிக் குழு கூட்டம் என்.குருசாமி தலை மையில், தஞ்சை ஒன்றியச் செயலாளர் கே.அபி மன்னன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் முன்னி லையில் நடைபெற்றது.  தஞ்சை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பி. செந்தில்குமார், தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கோ.நீலமேகம் ஆகியோர் உரையாற்றி னார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் களப்பிரன், இ.வசந்தி மற்றும் மாநகரக் குழு, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள், அரங்க முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர். இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும், தி.மு.க வின் தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் ச.முரசொலி வெற்றிக்கு, கட்சியினர் அயராது பணியாற்ற வேண்டு மென்று முடிவு செய்யப்பட்டது.

உரிய ஆவணங்கள் இல்லாத பொருட்கள், ரொக்கம் பறிமுதல்: மேல்முறையீடு செய்யலாம்

மயிலாடுதுறை, மார்ச் 23 - நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்கா ணிப்பு குழுவினரால், உரிய ஆவணங்களின்றி கைப்பற்றக் கூடிய பொருட்கள் மற்றும் ரொக்கத் தொகை கள் தொடர்பாக மேல்முறையீடு ஏதேனும் இருப்பின், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளம்  அறை எண்.45-இல் மேல்முறையீடு குழுவிடம் மாலை 4  முதல் 5.30 மணிக்குள் தெரிவிக்கலாம். மேற்காணும் பொருள் தொடர்பான மேலும் விவ ரங்களுக்கு மாவட்ட கருவூல அலுவலர் கைப்பேசி எண்:7530014473, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (கணக்கு) கைபேசி எண்: 8667425364-இல் தொடர்பு  கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல்  அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

10 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு வாழ்த்து

பாபநாசம், மார்ச் 23 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10  ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுத உள்ள மாணவர்களுக் கான வாழ்த்துக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு பள்ளியின் செயலர் வரதராஜன்  தலைமை வகித்தார். பள்ளியின் தலைமைச் செயலர்  கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளி அறங்காவ லரும், சிங்கப்பூர் முன்னாள் தமிழாசிரியருமான திருநா வுக்கரசு சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் தீபக்,  துணை முதல்வர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.  மாணவர்கள், பள்ளிக்கு மீன் தொட்டியையும், ஆசிரி யர்களுக்கு கேடயத்தையும் நினைவுப் பரிசாக வழங்கி னர். பள்ளி சார்பில் மாணவர்களுக்கு பேனா, பைல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

திருவாரூர்-காரைக்குடி ரயில் பாதை மின்மயமாக்கப்படுமா? 

தஞ்சாவூர், மார்ச் 23-  சுற்றுச்சூழலை பாதுகாக்க திருவாரூர் -  பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையை விரைவில் மின்மயமாக்க வேண்டும் என பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாது காப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் விவேகானந்தம், துணைத் தலைவர் ரெஜினால்ட் செல்வகுமார், செயலாளர் ஈகா வைத்தியநாதன், துணைச் செயலாளர் ஜெய சீலன், பொருளாளர் எம்.வீரபத்திரன் ஆகி யோர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும்  திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோ ருக்கு, திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக் குடி ரயில் பாதையை விரைவில் மின்மயமாக்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளனர். அந்த கோரிக்கை மனுவில், “தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தைச் சேர்ந்த திருத்து றைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் பாதை யில் மின்மயமாக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப் பணியை துவங்கிய தெற்கு ரயில்வே நிர்வா கத்திற்கு, இப்பகுதி மக்களின் சார்பாகவும், ரயில் பயணிகள் சார்பாகவும் நன்றி தெரி வித்துக் கொள்கிறோம். 149 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட திரு வாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையையும் மின்மயமாக்க ரயில்வே வாரியம்  143 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  ஒப்புத லும் அளித்துள்ளது. எனவே திருவாரூர் - பட்டுக் கோட்டை - காரைக்குடி ரயில் பாதையிலும் மின் மயமாக்கும் பணிகளை விரைவில் துவங்கி வேண்டும்.  இந்த மின்மயமாக்கும் பணிகள் நிறை வுற்றால், சென்னையிலிருந்து இந்த ரயில் பாதையில் வரும் ரயில்களுக்கு, திருவாரூரில் மின்சார ரயில் இன்ஜின்களுக்கு பதிலாக டீசல் ரயில் இன்ஜின் மாற்றும் பணிகள் இல்லா மல் போகும். அதனால் பயண நேரம் மிச்சமா கும். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள முக்கிய மான ரயில் நிலையங்களுக்கு நிறுத்தம் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். தற்போது தாம்பரம் - செங்கோட்டை அதி விரைவு ரயில் அதிராம்பட்டினம், பேராவூரணி ரயில் நிலையங்களில் நின்று செல்லவில்லை. மின் மயமாக்கலுக்கு பின்னர் இன்ஜின் மாற்றம்  செய்யும் நேரம் மிச்சமாவதால், மேற்படி ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல வாய்ப்பு ஏற்படும். சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் செல்லும் ரயில் பயணிகள் மிக வும் பயனடைவார்கள்.  மேலும் ரயிலின் வேக மும் அதிகப்படுத்தப்படும். இதன்மூலம் இந்த தடத்தில் ரயில் பயணி கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக் கும் சென்னை-ராமேஸ்வரம் இரவுநேர விரைவு  ரயில், மயிலாடுதுறை மதுரை பயணிகள் ரயில்,  காரைக்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்,  ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி, காசி போன்ற  வட மாநிலங்களுக்கான விரைவு ரயில்களை அதிகளவில் இயக்கும் வாய்ப்பு ஏற்படும்.  முக்கியமாக புதை வடிவ எரிபொருளான டீசல் உபயோகம் குறைக்கப்பட்டு, இப்பகுதி யில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். டீசல் இன்ஜின் பணிமனைகளின் உபயோகம் இல்லா மல் போவதால் பொருளாதார சிக்கனமும் ஏற்படும். எனவே திருவாரூர் - பட்டுக்கோட்டை -  காரைக்குடி ரயில் பாதையில் விரைவில் மின்மய மாக்கும் பணிகளை துவக்க வேண்டும் என  கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

தேர்தல் விதியை மீறல் 
71 பேர் மீது வழக்கு: ரூ.14.32 லட்சம் பறிமுதல்

மயிலாடுதுறை தேர்தல் அலுவலர் தகவல் கும்பகோணம், மார்ச் 23- இந்திய தேர்தல் ஆணையம் நாடாளு மன்ற பொதுத் தேர்தலுக்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி யில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288  வாக்குச்சாவடிகளும், மயிலாடுதுறை சட்ட மன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடி களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில்  306 வாக்குச்சாவடிகளும், திருவிடை மருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குச்சாவடிகளும், கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1743 வாக்குச்சாவடிகள் உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 பதற்ற மான வாக்குச்சாவடிகளும், தஞ்சாவூர் மாவட் டத்தில் 39 பதற்றமான வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 89 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டுள்ளது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தலை  எதிர்கொள்ள வாக்குப்பதிவு அலுவலர்கள் 5000 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சட்டம்  ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள மாவட்டத் தில் 85 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய  சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலை எதிர் கொள்ள வாக்குப்பதிவு அலுவலர்களாக 5000 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சட்டம்-ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தில் 75 மண்டல அலுவலர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டமன்ற  தொகுதிகளுக்கு 3 குழுக்கள் வீதம் 9  பறக்கும்படை மற்றும் நிலையான கண் காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியோர் மீது தொடர்ந்து நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 3704 சுவர் விளம்பரங்களும், 6864 சுவரொட்டிகளும், 1174 பதாகைகளும், 751 இதர விளம்பரங்களும் அகற்றப்பட்டு, 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நிலையான கண்காணிப்பு குழு வின் வாகனச் சோதனைகளில் உரிய ஆவண மின்றி எடுத்து வரப்பட்டதாக இதுவரை ரூ. 14,32,200 பறிமுதல் செய்யப்பட்டு கருவூலக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.  நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ஊராட்சி அள வில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி, உறுதி மொழி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என மயிலாடுதுறை நாடாளு மன்ற தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சி யருமான ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இளைஞர் கொலை வழக்கில்  2 பேருக்கு ஆயுள் சிறை

கும்பகோணம், மார்ச் 23- இளைஞர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள  ஆவணியாபுரம் வாழைக்கொல்லை தெருவைச் சேர்ந்தவர் நசீர்முகமது. இவர் தி.மு.க.வின் தஞ்சை மாவட்ட அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வரு கிறார். இவருடைய தங்கை மும்தாஜ் பேகம். அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய கணவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். மும்தாஜ் பேகத்திற்கு சனேபர் என்ற மகள் உள்ளார்.  அவரை குறிச்சிமலை பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். முன்தசீர்(19) என்ற மகன் இருந்தார். இவர், என்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 4 அன்று மாலை  முன்தசீர் குறிச்சிமலையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு, தாயார் மும்தாஜ்பேகம் கொடுத்து அனுப்பிய  பொருட்களை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கி ளில் சென்றார். பின்னர் அவர் இரவு 7 மணியளவில் தனது  தாயை செல்போனில் அழைத்து, திருவிடைமருதுரில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவுக்கு சென்று வருவ தாக கூறினார். சிறிதுநேரம் கழித்து முன்தசீர் செல்போன் எண்ணில் இருந்து மும்தாஜ் பேகத்திற்கு மீண்டும் அழைப்பு வந்தது.  அதில் பேசிய மர்ம நபர்கள், முன்தசீரை கோயம்புத்தூ ருக்கு கடத்தி செல்வதாகவும், ரூ.5 லட்சம் கொடுத்து விட்டு முன்தசீரை அழைத்து செல்லுமாறும் மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மும்தாஜ் பேகம், இந்த தகவலை தனது சகோதரர் நசீர் முகமதுவுக்கு போன் மூலம்  தெரிவித்தார். உடனடியாக அவர் இதுகுறித்து திருவிடை மருதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஜன.5 அன்று காலை திருபுவனம் வீரசோழன் ஆற்றங்கரை பகுதியில் உள்ள ஒரு தோப்பில் முன்தசீர்  கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.  இந்தக் கொலை சம்மந்தமாக போலீசார் விசாரணை  நடத்தி வந்தனர். சந்தேகத்தின் பேரில் திருபுவனம் மருத்து வர் தெரு பகுதியைச் சேர்ந்த இஜாஸ் அகமது(25), பெரிய  பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்த ஜலாலுதீன் (23)  மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், 3 பேரும் சேர்ந்து முன்தசீரை கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறுவனுக்கு தொடர்பு இருப்பதால், அது தொடர்பான விசாரணை தஞ்சை சிறார் நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.  மற்ற 2 பேர் மீதான வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட  அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த கொலை வழக்கில் நீதிபதி ராதிகா அளித்த  தீர்ப்பில், இஜாஸ் அகமது, ஜலாலுதீன் ஆகிய இருவ ருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.13 ஆயிரம் அபரா தமும் விதித்து உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராகி வாதாடினார்.

மாடு, காய்கறி வியாபாரிகளிடம்  ரூ.2.72 லட்சம் பறிமுதல்

தேனி, மார்ச் 23- தேனி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும்  நிலைக் கண்காணிப்பு குழு நடத்திய வாகன சோதனையில் 3 இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது . ஆண்டிபட்டி நிலைக் கண்காணிப்பு குழு தலை வர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் கண்ட மனூர் அருகே அண்ணா நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது லாரியை சோதனையிட்ட போது சுருளி பட்டியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி சுப்பையன் என்பவ ரிடம் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட  ரூ.1லட்சம்  பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது. அது போல ஆண்டிபட்டி நிலைக்கண்கா ணிப்பு குழு தலைவர் முத்துகருப்பையா தலைமையிலான குழுவினர் கடமலை-மயிலை சாலையில் நடத்திய  வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த  சுதாகரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் ரூ.82,480 ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டு பறி முதல் செய்யப்பட்டது. இவர் தனியார் எண்ணெய்  நிறுவனத்தில் பணம் வசூலிப்பவர் ஆவார். கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே  தேர்தல் பறக்கும் படை அலுவலர்நாகராஜ் தலை மையில் நடத்திய வாகனசோதனையில் பிக்கப் வேனின் வந்த கேரள மாநில ஆலப்புழா அருகே வள்ளிக் குண்ணம் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி  சபி மோன் என்பவரிடம் ரூ.90ஆயிரம் கைப்பற்றப்பட்டு  உத்தமபாளையம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் மூன்று இடங்களில் நடைபெற்ற சோதனை யில் ரூ.2.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நகை நிறுவன சரக்கு வாகனத்தில்  வந்த ரூ.3.10 கோடி நகைகள் பறிமுதல்

திண்டுக்கல், மார்ச் 23-  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை  சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேனி-மதுரை  நெடுஞ்சாலையில் வத்தலக்குண்டு அருகே மின்வாரிய  உப மின் நிலையம் அருகே உள்ள வத்தலக்குண்டு சோதனை சாவடியில் தேர்தல் நிலையான கண்கா ணிப்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, தேனியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி  வந்த தனியார் நகை நிறுவன சரக்கு வாகனத்தை  நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள்  இன்றி 9 தங்க நகைகள் பெட்டிகளை எடுத்து செல்வது  தெரிய வந்தது. இதையடுத்து நகை பெட்டிகளை பறிமுதல் செய்த அதி காரிகள், நிலக்கோட்டை தேர்தல் நடத்தும் துணை அலுவ லர் மாரியிடம் நகைகளை ஒப்படைத்தனர். பின்னர் தேர்தல்  நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடி  உத்தரவின் பேரில், தேர்தல் பிரிவு வணிக வரித்துறை யினர் மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்டு நகைகளை ஆய்வு செய்தனர். விசாரணையில் தேனியில் உள்ள நகைக் கடைகளுக்கு  மொத்த வியாபாரத்திற்கு கொடுப்பதற்காக கோவை யில் இருந்து கொண்டு வந்தது தெரியவந்தது. நகை களின் மதிப்பு ரூ.3,09,79,550 ஆகும். கைப்பற்றப்பட்ட  நகைகள் நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் கருவூல  அதிகாரி ஜோதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை கிழக்கு, மேலூர் சட்டமன்ற தொகுதிகளில்  சு.வெங்கடேசனை அதிக வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்வோம்! செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேச்சு

மதுரை, மார்ச் 23- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்க டேசன் அறிமுக கூட்டம் மே லூரில் வியாழனன்று நடை பெற்றது.  கூட்டத்திற்கு வணிகவரி,  பத்திரபதிவுத்துறை அமைச் சரும் திமுக மாவட்ட செயலாள ருமான பி.மூர்த்தி தலைமை வகித்தார்.  அப்போது அமைச்சர்  பி.மூர்த்தி பேசுகையில், ‘‘தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கான களப்பணிகளை தொண்டர்கள் வெற்றிகரமாக செய்திட வேண்டும். மேலூர் பகுதியில் தொழிற் பேட்டை அமைப்பதற்காக கொட்டாம்பட்டி பகுதியில் இடம்  தேர்வு நடைபெற்று வரு கிறது. மேலூர் பகுதிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. முல்லை பெரியாறு-வைகை  அணையில் இருந்து  மேலூர் ஒருபோக பாச னத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவசாயி களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் உத்தரவின் படி தற்போது முழுமையாக தண் ணீர் திறக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில்  மதுரையில் உள்ள 6 தொகு திகளிலும் அதிக வாக்கு களை பெற வேண்டும். மதுரை கிழக்கு, மேலூர் சட்ட மன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை அளித்து நமது வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்காக திமுக நிர்வாகிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

‘பொன்.ராதாகிருஷ்ணன் பொய் பேசுகிறார்’

நாகர்கோவில்,  மார்ச் 23-  கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதியின் பாஜக வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். இதை யொட்டிசெய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு கனிமக்கடத்தலை தடுக்க வில்லை என குற்றம் சாட்டினார். அமைச்சர் மனோ  தங்கராஜ் பினாமி பெயரில் கனிம கடத்தலில் ஈடுபடுவ தாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்க ராஜ் நாகர்கோவிலில் நிரு பர்களிடம் கூறியதாவது:  திமுக ஆட்சிக்கு வந்த பின் னர்தான் குமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் கட்டுப்படுத் தப்பட்டன. தற்போது 5 குவாரி கள் மட்டுமே உள்ளன. இங்கி ருந்து கேரளாவுக்கு கனி மங்கள் கொண்டு செல்லப் படுவதில்லை. மாநில வீட்டு மாநிலம் கனிம வளங்கள் கொண்டு செல்வதை ஒன்றிய அரசு தான் தடுக்க வேண்டும். இது கூட முன் னாள் ஒன்றிய அமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணனுக்கு தெரியவில்லை. அவருக்கு ஓட்டு போட்டு என்ன நடக்கப் போகிறது என்பது தெரிய வில்லை. எனக்கு பினாமி பெயரில்  லாரிகள் இருப்பதாக கூறி யிருக்கிறார். இதை நிரூ பித்தால் அதை அவரிடமே ஒப்படைக்க நான் தயாராக உள்ளேன். இதை சவா லாகவே தெரிவிக்கிறேன். பொன்முடி விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் அவமா னப்பட்டு இருக்கிறார். இதை விட கேவலம் வேறொன்று மில்லை. ஆளுநரை விட  இந்திய அரசமைப்பு சட்டம் தான் பெரிது என்பது நிரூ பிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.