districts

img

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

மயிலாடுதுறை, மார்ச் 6 - மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் க.அன்பழகன் தலைமையிலான குழு நேரில் ஆய்வு செய்தது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலை வர் க.அன்பழகன் தலைமை யில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மயி லம் சட்டமன்ற உறுப்பினர் ச. சிவக்குமார், ஆரணி சட்டமன்ற  உறுப்பினர் சேவூர்.எஸ்.ராமச் சந்திரன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் அடங்கிய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம் புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். தரங்கம்பாடி வட்டம் தலச் சங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.32  லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப் பறை கட்டடம் கட்டப்பட்டு வரு வதை ஆய்வு செய்து பள்ளி  குழந்தைகளுடன் கலந்துரை யாடினர். தொடர்ந்து, பள்ளி யின் சமையலறை, கழிப்பறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். பின்பு பூம்புகார் சுற்றுலா தலம் புதுப்பிக்கும் பணிகள், வானகிரி மீன்  இறங்குதளத்தை பார்வை யிட்டு மீனவர்களிடம் கலந்து ரையாடினர்.  திருமுல்லைவாசல் கிரா மத்தில் வெள்ளப்பள்ளம் உப்ப னாற்றின் குறுக்கே ரூ.8 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருவதையும், சீர்காழி அரசு  மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை மையம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரு வதையும், மயிலாடுதுறை பெரி யார் அரசு தலைமை மருத்து வமனையில் ரூ.45 கோடியே 5  லட்சம் மதிப்பீட்டில் கூடுதல்  கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு, பணிகளின் தரத்தை ஆய்வு செய்தனர்.