districts

img

அறந்தாங்கியில் ஹெல்ப் தி பீப்பிள் அறக்கட்டளை துவக்கம்

அறந்தாங்கி, ஜன.3 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ‘ஹெல்ப் தி பீப்பிள் பவுண்டேசன்’ அறக்கட்டளை புதிதாக துவங்கப் பட்டது. உதவிட கரம் கொடுப்போம் என்ற நோக்கத்தில் இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டது. இதன் நிறுவன ராக ரோட்டரி ஆண்டோ பிரவின் உள்ளார்.  விழாவிற்கு திசைகள் மாணவர் வழிகாட்டு அமைப்பு  தலைவர் டாக்டர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்து  உரையாற்றினார். ஆலங்குடி அருட்தந்தை குழந்தை சாமி முன்னிலை வகித்தார். பல்வேறு அமைப்பைச் சேர்ந்த வர்கள் பங்கேற்றனர்.  அறக்கட்டளை துவக்க நாளில் மக்களுக்கு நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட்டன. ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரம் வளம்பெற தையல் இயந்திரம், மாற்றுத்திற னாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், நலிந்தோருக்கு  ஆடுகள், ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த பட்டதாரி களுக்கு நிதி உதவி உள்ளிட்ட உதவிகள் நிகழ்ச்சியில் பய னாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டன.