districts

img

குடிதண்ணீர் பற்றாக்குறை காலி குடங்களுடன் போராட்டம்

கள்ளக்குறிச்சி, ஆக. 21- கள்ளக்குறிச்சி மாவட்டம், திரு நாவலூர் ஒன்றியம், ஆத்தூர் நன்னா வரம் கிராமங்களில் குடி தண்ணீர் அதி கரித்துள்ளது.  ஊராட்சி மன்றமும் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்டுக்கொள்ள வில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடி தண்ணீர் பிரச்சனைகளை உடனே சரி செய்து கொடுப்பதாகவும் ஆத்தூர் ஊராட்சி மன்ற செயலாளர் இடமாற்றம் செய்வதாகவும் வாக்குறுதியளித்தனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆத்தூர்-நம்மாவரம் ஒன்றிய கவுன்சிலர் இ.அல மேலு தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு டீ. ஏழுமலை, ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன், மாவட்டக் குழு கே.அய்யனார் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.