கும்பகோணம், ஜூன் 26 -
2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு இளநிலை மாணவ-மாணவியர் சேர்க்கையின் மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 30 மற்றும் ஜூலை 3 அன்று நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2023-2024 ஆம் கல்வி யாண்டிற்கான முதலாமாண்டு இளநிலை மாணவ-மாணவியர் சேர்க்கையின் மூன்றாம் கட்ட கலந்தாய்வு 2023 ஜூன் 30 மற்றும் ஜூலை 3 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
ஜூன் 30 அன்று தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக மேலாண்மை, பொருளியல், வரலாறு, இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், ஜூலை 3 அன்று கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல். கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புள்ளியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் சேர்க்கைக் கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
மேலும் இனவாரியான மாணவர் சேர்க்கையானது, ஜூலை 4 அன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (BC), ஜூலை 5 அன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கும் (MBC), ஜூலை 6 அன்று பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கும் (SC,ST) நடைபெறும். ஜூலை 7 அன்று அனைத்துத் தகுதியான விண்ணப்ப தாரர்களும் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் அ.மாதவி தெரிவித்துள்ளார்.