புதுக்கோட்டை, ஜன.31 - தீக்கதிர் நாளிதழில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முகவராக பணியாற்றி வரும் புதுக் கோட்டை முகவர் எஸ்.செல்வத்தை புதுக் கோட்டை வாசகர் பேரவையும், மரம் நண்பர் களும் பாராட்டினர். 1780 ஜனவரி 29 அன்று ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்ற ஆங்கிலேயர் பெங்கால் கெஜட் அல்லது கல்கத்தா ஜெனரல் அட்வர் டைசர் (Bengal Gazette or Calcutta General Advertiser) என்ற ஆங்கில வாரப் பத்திரிகையை வெளியிட்டார். இதுதான் இந்தியாவின் முதல் பத்திரிகை. கொள்கைப் பிடிப்போடு, அச்சமின்றி எழுதியதற்காக இந்தியாவில் முதலில் சிறை சென்றவரும் இவர்தான். இதனையொட்டி ஜனவரி 29 இந்திய பத்திரிகைகள் தினமாக கொண்டா டப்படுகிறது. புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் மரம் நண்பர்கள், இந்திய பத்திரிகைகள் தினத்தில், அதிகாலையில் இல்லந்தோறும், நாள்-நேரம் பாராமல் செய்தித்தாள்களை விநியோகம் செய்யும் நபர்களையும், முக வர்களையும், அவர்கள் செய்தித்தாள் எடுக்கும் இடத்திற்கே சென்று வாழ்த்தி, இனிப்பு வழங்கி கௌரவித்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக தீக்கதிர் நாளி தழை தொடர்ச்சியாக தொய்வின்றி விநியோ கம் செய்துவரும் முகவர் எஸ்.செல்வம் உட்பட 25 பேர் மற்றும் முகவர்கள் கௌரவிக் கப்பட்டனர். வாசகர் பேரவை செயலர் சா. விஸ்வநாதன், மரம் நண்பர்கள் செயலர் பழ. கண்ணன், பொறியாளர் வி.இறையன்பு உள் ளிட்டோர் பங்கேற்றனர்.